தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலியல் வன்கொடுமை: கோயில் பூசாரி கைது

Updated On :28 மே 2024, 10:29 pm

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கோயில் பூசாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை பாரிமுனையில் உள்ள கோயில் ஒன்றில் பூசாரியாக வேலை செய்பவர் கார்த்திக் முனுசாமி (46). இவர், அந்தக் கோயிலுக்கு வந்த தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளரிடம் நெருக்கமாகப் பழகியுள்ளார்.

இந்த நிலையில், விருகம்பாக்கத்தில் வசிக்கும் அந்தப் பெண்ணை, கார்த்திக் முனுசாமி தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். வீட்டுக்கு சென்றதும் அந்தப் பெண்ணுக்கு அவர் தீர்த்தம் கொடுத்துள்ளார்.

அதை அந்தப் பெண் குடித்ததும் மயங்கியுள்ளார். அப்போது, அவரை, கார்த்திக் முனுசாமி பாலியல் வன்கொடுமை செய்தார். மயக்கம் தெளிந்து, தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அறிந்து அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். அதற்குள் கார்த்திக் முனுசாமி, தான் அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார்.

ஏற்கெனவே கார்த்திக் முனுசாமிக்கு திருமணமான நிலையில், இருவரும் கணவன் - மனைவிபோல ஒரே வீட்டில் வாழ்ந்துள்ளார். இதில், அந்தப் பெண் கர்ப்பமடைந்ததால், கார்த்திக் முனுசாமி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கலைத்துள்ளார்.

மேலும், தனது நண்பர் ஒருவரிடம் நெருக்கமாக இருக்கும்படி கார்த்திக் கூறியதால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார், கார்த்திக் முனுசாமி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

கொடைக்கானல் அருகே தலைமறைவாகியிருந்த அவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.