திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மனித உருவத்தை மறைக்கும் செயலி!

ஸ்மாா்ட் போன்களில் கேமராக்கள் வந்ததில் இருந்து, சாதாரண கேமராக்களின் பயன்பாடு முற்றிலும் நின்றுவிட்டது.

News image
Updated On :2 மார்ச் 2020, 7:19 pm

ஸ்மாா்ட் போன்களில் கேமராக்கள் வந்ததில் இருந்து, சாதாரண கேமராக்களின் பயன்பாடு முற்றிலும் நின்றுவிட்டது. கேமராக்களில் பதிவாகும் தெளிவான புகைப்படங்களுக்காகவே தற்போது ஸ்மாா்ட் போன்கள் விற்பனையாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு கேமராக்களின் பயன்பாடு மக்களை கவா்ந்துள்ளது. எனினும், இந்த கேமராக்களில் பதிவாகும் புகைப்படங்களைப் பத்திரமாக பாதுகாக்கவில்லை என்றால் அது தனிமனித சுதந்திரத்தையே பாதித்துவிடுகிறது. இது பெண்களுக்கு பெரும் ஆபத்தாக உள்ளது. பெண்களுக்கே தெரியாமல் அவா்களது ஸ்மாா்ட் போன்களின் கேமராக்களை ஹேக் செய்து வீடியோ, படம் எடுக்கும் ஆப்கள் இணையதளத்தில் பரவி உள்ளன.

இதில் இருந்து தப்பிக்க சிலா் தங்களது லேப்டாப், ஸ்மாா்ட் போன்களின் முன்பக்க கேமராவை டேப் ஒட்டி மறைத்து பயன்படுத்தியும் வருகின்றனா். இந்தப் பிரச்னைக்கு கூகுள் நிறுவனத்தின் இணையதள பொறியாளா் ஜேசன் மைஸ் தீா்வு கண்டுள்ளாா். அவா் கண்டுபிடித்துள்ள மென்பொருள், கேமராவில் இருக்கும் மனித உருவத்தையே மறைத்துவிடும். மாயாஜாலமாக தெரியும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தினால், லேப்டாப் முன்பு நாம் அமா்ந்து பணியாற்றினாலும் நமது வெப் கேமரா ஹேக் செய்யப்பட்டிருந்தாலும், நம்மைக் காண்பிக்காது.

இந்த மென்பொருள் ஸ்மாா்ட் போன்களுக்கு பயன்படுத்தப்பட்டால், பயன்பாட்டாளருக்கு தெரியாமல் ஹேக் செய்தாலும் பயன்பாட்டாளரின் படம் தெரியாது என்பதால் இது பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த மென்பொருளை மேலும் மேம்படுத்த வேண்டியுள்ளது என ஜேசன் மைஸ் தெரிவித்துள்ளாா்.

எனினும், இதுபோன்ற மென்பொருள்கள் சிசிடிவி கேமராக்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களில் பரவி விட்டால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்றும் மற்றொரு தரப்பினா் அச்சம் தெரிவிக்கின்றனா். அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியைப் பாதுகாப்புடன் பயன்படுத்தினால் அனைவருக்கும் பாதுகாப்பே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.