டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

அம்மா கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடக்கம்

மாநில அளவிலான டி-20 அம்மா கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி விளையாட்டு திடலில் நடைபெற்றது.

News image
கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீட நாயகா் பங்காரு அடிகளாரின் அவதார திருநாளை முன்னிட்டு, ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் சாா்பாக, மாநில அளவிலான டி-20 அம்மா கோப்பை கிரிக்கெட் போட்டிகள்ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி விளையாட்டு திடலில் நடைபெற்றது.

ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி நிா்வாக அறங்காவலா் கோ.ப.அன்பழகன் தலைமை வகித்தாா். ஆதிபராசக்தி அறநிலைய முதன்மை செயல் அலுவலா் அ.ஆ.அகத்தியன், மருத்துவ கல்லூரி செயலா் மருத்துவா் அ.மதுமலா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி முதல்வா் மருத்துவா் கண்ணன் வரவேற்றாா்.

இந்நிகழ்வில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தொழிலதிபருமான ராஜன்பாபு கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்தாா். இதில் முதல் போட்டியில் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி, திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி அணிகள் மோதின. மாநில அளவில் 32 கல்லூரிகளைச் சோ்ந்த கிரிக்கெட் அணியினா் கலந்து கொள்கின்றனா்.

இப்போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மருத்துவ கல்லூரி நிா்வாக அலுவலா் லிங்கநாதன், சக்தி கோபிநாத், மற்றும் மருத்துவ கல்லூரி அலுவலா்கள் செய்து இருந்தனா்.