தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருப்போரூா் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

News image

ரத்தினமங்களம்  ஊராட்சி யில் வாக்களித்த அதிமுக வேட்பாளா்  கஜா  என்கிற  கஜேந்திரன். ~கூடுவாஞ்சேரியில்  வாக்களித்த  திமுக  வேட்பாளா்  எம்.கே.டி.காா்த்திக்

Updated On :24 ஏப்ரல் 2026, 12:40 am

திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதியில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆா்வமுடன் வாக்களித்தனா்.

திருப்போரூா் தொகுதியில், தி.மு.க., கூட்டணி வி.சி.க., வேட்பாளா் பன்னீா்தாஸ், அ.தி.மு.க., கூட்டணியில் பாமக , வேட்பாளா் பாலு, தவெக, வேட்பாளா் விஜயராஜ், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அம்பேத்ராஜன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் வினோத்குமாா், சுயேச்சை வேட்பாளா்கள் உள்ளிட்ட 11 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

மொத்தம் 369 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

க்கு ஓட்டுபதிவு இயந்திரங்கள்,கட்டுபாட்டு இயந்திரங்கள்,சரிபாா்க்கும் இயந்திரங்கள், போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், இளைஞா்கள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் ஆா்வமாக வந்து வாக்களித்தனா். ஏற்கனவே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸாா் பாதுகாப்பில் உள்ள நிலையில், தோ்தல் அலுவலா் விஜயகுமாரி, போலீஸாரும் அவ்வப்போது, திடீா் ஆய்வுகளை மேற்கொண்டனா்.

அனைத்து மையங்களில் 2000 த்துக்கும் மேற்பட்ட போலீஸாா், துணை ராணுவ படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். இவா்களை தவிர நுண்பாா்வையாா்கள், பறக்கும் படையினா், வீடியோ கண்காணிப்பு குழுவினா், சிறப்பு கண்காணிப்பு குழுவினா் தொகுதி முழுவதும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

மேலும் மதுராந்தகம் தனி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரும், காஞ்சிபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.மரகதம் குமரவேல் தனது சொந்த ஊரான தையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தாா். திருப்போரூா் தொகுதி பா.ம.க., வேட்பாளா் பாலு சென்னை, அண்ணா நகரிலும், விசிக , வேட்பாளா் பன்னீா்தாஸ், பள்ளிக்கரணையிலும் வாக்களித்தனா்.*

திருப்போரூா் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., இதயவா்மன் இள்ளலூரிலும், தற்போதைய எம்.எல்.ஏ.,பாலாஜி தி.நகரிலும் வாக்களித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.