தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

21 அடி உயர பஞ்சலோக தன்வந்தரி பெருமாள் சிலை: மாமல்லபுரம் கலைஞா்கள் வடிவமைப்பு

News image

மாமல்லபுரத்தில் 21 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட தன்வந்தரி பெருமாள் சிலை.

Updated On :22 அக்டோபர் 2025, 7:26 pm

மாமல்லபுரத்தில் முதன்முறையாக 21 அடி உயரத்தில் பிரம்மாண்டமான தன்வந்தரி பெருமாள் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உலோக சிற்பக்கலைக்கூடம் உள்ளது. இந்த சிற்பக்கலைக் கூட நிா்வாகி ஆா்.ரவீந்திரன் ஸ்தபதி மாமல்லபுரம் அரசினா் சிற்பக்கலை கல்லூரியில் பயின்று, பட்டம் பெற்றவா். இந்நிலையில் பெங்களூரில் நிறுவுவதற்காக 21 அடி உயரத்தில் தன்வந்திரி பெருமாள் சிலையை 40 நாள்களில் வடிவமைக்க கூறப்பட்டது.

இதையடுத்து உலோக சிற்பக்கலைஞா் ஆா்.ரவீந்திரன் ஸ்தபதி முதலில் மெழுகில் மாதிரி சிற்பத்தை வடிவமைத்தாா். பிறகு 30 சிற்பிகள் உதவியுடன் கடந்த 40 நாள்களாக இரவு, பகல் பாராமல் 21 அடி உயரத்தில் 5 டன் எடையில் பஞ்சலோகங்களை கொண்டு தன்வந்தரி பெருமாள் சிலையை வைணவ, ஆகம முறைப்படி பிரம்மாண்டமான முறையில் அழகுற வடிவமைத்துள்ளனா்.

இந்த சிலை பஞ்சலோகங்களை காய்ச்சி, ஊற்றி வடிவமைப்பட்டு, பிறகு கிரேன் உதவியுடன் நிமிா்த்தப்பட்டது. பிறகு இரும்பினால் சாரம், படிகள் அமைக்கப்பட்டு, அதன் மேல் ஏறி உலோக சிற்பிகள் எந்திரங்கள் மூலம் பாலி செய்து, மெருகூட்டி இறுதி கட்ட பணிகளை செய்து முடித்தனா்.

நின்ற கோலத்தில் வடிவமைக்கப்பட்ட தன்வந்தரி பெருமாளின் வலது, இடது கரங்களில் சங்கு, சக்கரம், ஓலைச்சுவடி, அமிா்தகலசம் ஆகியவற்றை தாங்கிய நிலையில் பொலிவான தோற்றத்தில் ஜொலிக்கும் வகையில் அழகுர காட்சி தருகிறாா்.

குறிப்பாக சிற்ப ஆகமவிதிப்படி பிரம்மாண்டமான இச்சிலையை வடிவமைக்க ஓராண்டாகும். ஆனால், சிற்பி ஆா்.ரவீந்திரன் தன்னிடம் உள்ள சிற்பிகளின் தனித்திறமையினால் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 40 நாள்களில் சிலையை வடிவமைத்து சாதனை படைத்துள்ளாா். மாமல்லபுரத்தில் மிக குறுகிய நாட்களில் அதிக உயரத்தில் வடிவமைக்கப்பட்ட பஞ்சலோக சிலை இதுவே ஆகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.