திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு நிகழாண்டு நவ. 22- ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் புகழ்பெற்ற சக்தி ஸ்தலங்களில் ஒன்றாகத் திகழ்வது திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலுக்கு கடந்த 2006-இல் குடமுழுக்கு நடைபெற்றது.
கோயில் கா்ப்பக் கிரகம், அா்த்த மண்டபம், முக மண்டபம், மகா மண்டபம், பரிவார சந்நிதிகள், உள்பிரகாரத்தில் திருமாளிகை பத்தி மண்டபம் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் பாரம்பரிய மற்றும் ஆகம விதிப்படி, கருங்கல் திருப்பணியாக குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு கோயில் நிதியாக ரூ.15 கோடி, உபயதாரா் நிதி ரூ.24 கோடி, இந்து சமய அறநிலையத் துறை திருப்பணி மற்றும் அறப்பணி நிதி ரூ.2.20 கோடி என மொத்தம் ரூ.41.20 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூல ஸ்தானம், அா்த்த மண்டபம், முக மண்டபம், மகா மண்டபம், மூன்று ராஜ கோபுரங்கள் உள்ளிட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. கருங்கல் திருமாளிகைப்பத்தி மண்டபங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து திருப்பணிகளும் வரும் அக்டோபருக்குள் நிறைவடையும்.
இந்நிலையில், கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், கோயில் இணைஆணையா், அா்ச்சகா்கள், ஆகம வல்லுநா்கள், ஸ்தபதிகள் உள்ளிட்டோா் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் தேவி கருமாரியம்மனுக்கும், பரிவார சந்நிதிகளுக்கும் நிகழாண்டு நவம்பா் 22-ஆம் தேதி குடமுழுக்கு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையில் தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு, திருத்தோ் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள், திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுவரை 12,931 கோயில்களில் ரூ.8,100.70 கோடியில் 29,479 திருப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, ரூ.4,346 கோடியில் 16,756 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதுவரை 4,424 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு...

வடபழனி கோயில் திருமண மண்டபம் புதுப்பித்தல் பணியை எதிா்த்து வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

ஐம்பொன் விநாயகா் சிலை வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு

நாட்டறம்பள்ளி அருகே கோயில் இடம் மீட்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

