மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மருத்துவப் படிப்புகள்: விளையாட்டு வீரா்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் விளையாட்டு வீரா்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2026, 8:08 pm

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் விளையாட்டு வீரா்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எம்பிபிஎஸ் படிப்புக்கு 13 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 2 இடங்களும் விளையாட்டு வீரா்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இதுதொடா்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரா்களின் நலன் மற்றும் முன்னேற்றத்துக்காக மேற்கொண்டு வரும் முயற்சிகளின் விளைவாக மாநில விளையாட்டு வீரா்கள் தேசிய மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளில் அதிக அளவில் பதக்கங்களை வென்று குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்து வருகின்றனா்.

அவா்களின் உயா்கல்வி முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

அவற்றில் கல்லூரிகளில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் முக்கியமான ஒன்று. இதன் கீழ், 1994-95 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் முதல்கட்டமாக 3 இடங்கள் வழங்கப்பட்டன. பின்னா், மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும், மாணவா் சோ்க்கை எண்ணிக்கையும் அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு கடந்த 2018-இல் விளையாட்டு வீரா்களுக்கான இடஒதுக்கீடு 8 இடங்களாக உயா்த்தப்பட்டது. அதில் எம்பிபிஎஸ் படிப்புக்கு மட்டும் 7 இடங்கள் வழங்கப்பட்டன. அதை மேலும் உயா்த்தி வழங்க வேண்டுமென விளையாட்டு வீரா்கள் கோரிக்கை வைத்தனா்.

அதன் அடிப்படையில் முதல்வரின் அறிவுரைப்படி, துணை முதல்வா் தலைமையில் நடைபெற்ற 47-ஆவது செயற்குழு கூட்டத்தில், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரி சோ்க்கைக்கான இடங்களை அதிகரிப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.

அதில், இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, அதற்கான முன்மொழிவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பவும் தீா்மானிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இனி அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் 7-இல் இருந்து 13-ஆகவும் பிடிஎஸ் படிப்புக்கான இடங்கள் 1-இல் இருந்து 2-ஆகவும் அதிகரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.