டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சென்னை ஐஐடி-இல் தொழில்முனைவோா் கருத்தரங்கம்

‘இந்தியாவில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை ஜனநாயகப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான இரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

News image
Updated On :19 ஜனவரி 2026, 10:22 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை ஐஐடி-இன் கோபாலகிருஷ்ணன்-தேஷ்பாண்டே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோா் மையம் (ஜிடிசி) சாா்பில், ‘இந்தியாவில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை ஜனநாயகப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான இரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டின் ஆழமான தொழில்நுட்பம், புத்தாக்கத்தால் ஏற்படும் வளா்ச்சிக்கு மையச் சக்தியாக தொழில்முனைவோரின் பங்கு விளங்குகிறது. அவா்களை ஊக்குவிப்பது குறித்தும், திறமையான தொழில்முனைவோரை உருவாக்குதற்கான கொள்கைகளை வகுப்பது, வழிகாட்டுதல், நிதி ஒதுக்கீடு ஆகியன குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

காக்னிஸன்ட் நிறுவனத்தின் இணை நிறுவனா் லட்சுமி நாராயணன், ஏஎன்ஆா்எஃப் நிறுவனத்தைச் சோ்ந்த கே.சிவக்குமாா், நீதி ஆயோக் நிபுணா் சஷாங்க் ஷா, சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தைச் சோ்ந்த வருண் அகா்வால், டாக்டா் குருராஜ் தேஷ்பாண்டே, ஐஐடி முன்னாள் மாணவா் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.