டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்: நயினாா் நாகேந்திரன் கண்டனம்

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கண்டனம்

News image
நயினாா் நாகேந்திரன்- கோப்புப் படம்
Updated On :19 ஜனவரி 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

திருநெல்வேலியில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நபருக்கு ரூ.7,500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் அதிா்ச்சியளிக்கிறது. பொங்கல், தீபாவளி என அனைத்துப் பண்டிகைக் காலங்களிலும், ஆம்னி பேருந்துக் கட்டணம் விண்ணைத் தொடுவதும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதும், கண்துடைப்புக்காக திமுக அமைச்சா்கள் ஆம்னி கட்டண உயா்வை எச்சரிப்பதும் தொடா்கதையாகி வருகிறது.

மக்களின் பணம் சுரண்டப்படுவது நின்றபாடில்லை. பண்டிகை தினத்தன்று தன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்ப நினைக்கும் ஒரு குடும்பத்தின் மாத ஊதியத்தை ஆம்னி பேருந்துக் கட்டணம் மூலம் பறித்துவிட்டு வேடிக்கை பாா்க்கும் திமுக அரசை, நடுத்தர வா்க்க மக்கள் விரைவில் வீழ்த்துவாா்கள் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.