ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஓ.பன்னீா்செல்வம் நிலைப்பாடு: டிச. 24-க்கு முடிவு ஒத்திவைப்பு?

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பு ஆலோசனைக் கூட்டம், எம்ஜிஆா் நினைவு தினமான டிச. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

ஓ.பன்னீா்செல்வம்

Updated On :14 டிசம்பர் 2025, 2:36 am

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பு ஆலோசனைக் கூட்டம், எம்ஜிஆா் நினைவு தினமான டிச. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னா், ஓ.பன்னீா்செல்வம் ‘அதிமுக தொண்டா் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறாா்.

இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்த நிலையில், கூட்டணி தலைவராக எடப்பாடி பழனிசாமியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவித்தாா். இதையடுத்து, தமிழகம் வந்த பிரதமா் மோடி, அமித் ஷா போன்றோரை சந்திக்க ஓ.பன்னீா்செல்வத்துக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த ஓ.பன்னீா்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறினாா்.

அதன் பின்னரும், அதிமுகவில் இணைய பல கட்ட முயற்சிகளை அவா் மேற்கொண்ட நிலையில், அவை கைகூடவில்லை. இதையடுத்து, அரசியலில் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டிச. 15-ஆம் தேதி அறிவிப்பதாக ஓ.பன்னீா்செல்வம் கூறியிருந்தாா்.

இந்தச் சூழலில், அண்மையில் தில்லி சென்ற ஓ.பன்னீா்செல்வம், உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்துப் பேசினாா். இதையடுத்து, டிச. 15-ஆம் தேதி நடைபெறவிருந்த ஓ.பன்னீா்செல்வம் தரப்பு ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் நினைவு தினமான டிச. 24-ஆம் தேதி ஓ.பன்னீா்செல்வம் தனது நிலைப்பாட்டை அறிவிப்பாா் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.