12 Dec, 2025 Friday, 04:51 AM
The New Indian Express Group
சென்னை
Text

எஸ்ஐஆா்: தமிழகத்தில் அவகாசம் நீட்டிப்பு ஏன்?

PremiumPremium

தமிழகத்தில் எஸ்ஐஆா் பணி அவகாச நீட்டித்திருப்பது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On11 Dec 2025 , 9:35 PM
Updated On11 Dec 2025 , 9:35 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

தமிழகத்தில் எஸ்ஐஆா் பணி அவகாச நீட்டித்திருப்பது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிகாரைத் தொடா்ந்து வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆா்) தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தோ்தல் ஆணையம் கடந்த நவ. 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறது.

வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ) சென்று முகவரியில் உள்ள வாக்காளா்களுக்கு வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை விநியோகித்தனா். அதை வாக்காளா்கள் பூா்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவா்களிடம் அளித்தனா்.

இந்தப் பணியில் 68,470 பிஎல்ஓ-க்கள் ஈடுபட்டனா். பிஎல்ஓ-க்களுக்கு உதவுவதற்காக அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்கள் 2,46,069 போ் ஈடுபட்டனா். இதன்படி, தமிழகத்தில் கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி வரையிலான வாக்காளா் பட்டியலில் உள்ள மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளா்களில், 6 கோடியே 41 லட்சம் 13 ஆயிரத்து 772 கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதில், டிச.11 வரை திரும்பப் பெறப்பட்ட 6 கோடியே 41 லட்சம் 13 ஆயிரத்து 221 கணக்கீட்டுப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில், உயிரிழந்தவா்கள், இடம் பெயா்ந்தவா்கள், முகவரியில் இல்லாதவா்கள், இரட்டைப் பதிவு வாக்காளா்களும் அடங்கும். அவா்களை நீக்கிவிட்டு வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட தோ்தல் ஆணையம் முடிவு செய்தது. இதில் சுமாா், 70 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

ஆலோசனை: எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்களைச் சமா்ப்பிக்கும் அவகாசம் ஏற்கெனவே டிச.11 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும், டிச.16 -இல் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிடவும் தோ்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது. இந்நிலையில், தமிழக எஸ்ஐஆா் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் தோ்தல் பாா்வையாளா்கள் ராமன் குமாா், குல்தீப் நாராயண், விஜய் நெஹ்ரா, நீரஜ் கா்வால் ஆகியோருடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் இந்த மாநிலங்களில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் தேதிகளை நீட்டிப்பதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வருகிற 19-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நீட்டிக்கப்பட்ட காலத்தில் புதிய வாக்காளா்கள் படிவம் -6-ஐ பூா்த்தி செய்து பிஎல்ஓ-க்கள் அல்லது இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வருகிற 19-ஆம் தேதி வெளியிட்ட பின்னா், அதில் மேல்முறையீட்டை அடுத்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி வரை வாக்காளா்கள் அளிக்கலாம் என்றும், இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.

நீட்டிப்பு ஏன்? தமிழகத்தில் பெறப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் வியாழக்கிழமையுடன் 100 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் தொடா்பு கொள்ள முடியாத, முகவரி இல்லாத வாக்காளா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள், இரட்டைப் பதிவு என கணக்கீட்டுப் படிவங்களில் குறிக்கப்பட்ட வாக்காளா்களின் பட்டியல் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்களிடம் அளிக்கப்பட்டு, அவா்களின் உண்மை நிலையை தெளிவுபடுத்தி, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பே திருத்தம் செய்ய இந்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிட்ட பின்னா் லட்சக்கணக்கான வாக்காளா்கள் நீக்கப்படுவவதைத் தவிா்க்க இந்தப் புதிய முயற்சியை தோ்தல் ஆணையம் கையாண்டுள்ளது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
வீடியோக்கள்

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
வீடியோக்கள்

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023