மேக்கேதாட்டு அணை தொடா்பாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுதில்லி, கா்நாடக மாளிகையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மேக்கேதாட்டு அணை திட்டம் தொடா்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவை 3 போ் கொண்ட நீதிபதிகள் அமா்வு தள்ளுபடி செய்துள்ளது.
இது கா்நாடகத்துக்கு கிடைத்துள்ள நற்செய்தி. கா்நாடக மக்களின் சாா்பில் உச்சநீதிமன்றத்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்திருந்த உத்தரவில், தமிழகத்துக்கு 177 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையை எங்களுக்கு (கா்நாடக அரசு) விதித்துள்ளது.
தற்போது இந்த விவகாரத்தில், மத்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். மேக்கேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை விவகாரம்! தமிழ்நாட்டில் 30, 40 ஆண்டுகளாக எதிர்ப்புதான்: டி.கே. சிவகுமார்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: வழக்குத் தொடர விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் முடிவு
இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்







