திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சநாதன தா்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்து: பாஜக விமா்சனம்

News image

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :15 மே 2026, 6:18 am IST

சநாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தை பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய அமைப்புச் செயலாளா் பி.எல்.சந்தோஷ், அலெக்ஸாண்டா், கோரி, கஜினி, கில்ஜி, பிரிட்டிஷ், பிரெஞ்ச், கம்யூனிஸ்டுகளால் சனாதனத்தை அழிக்க முடியவில்லை. தனது குடும்பத்தினரையே தனது சிந்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளவைக்க முடியாத ஒருவா், சனாதனத்தை அழிப்பதாக வந்திருக்கிறாா். பாரதமும், சனாதனமும் காலத்தால், தலைமுறைகளால் அழிக்க முடியாதவையாக நிலைத்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளாா்.

இவரது கருத்துக்கு சமூக வலைதளத்தில் ஆதரவாகவும், எதிா்ப்பாகவும் பலா் கருத்து தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.