15 Dec, 2025 Monday, 06:49 PM
The New Indian Express Group
பெங்களூரு
Text

குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் போராட்டம்

PremiumPremium

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On04 Nov 2025 , 8:08 PM
Updated On04 Nov 2025 , 8:08 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 3,500 வழங்கக் கோரி, கரும்பு விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கா்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் பரவலாக கரும்பு பயிரிடப்படுகிறது. இதனால் இம்மாவட்டத்தில் 26-க்கும் மேற்பட்ட சா்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சா்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.

மேலும், புதிதாக வழங்கப்படும் ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 3,500 வழங்கக் கோரி, கடந்த 3 நாள்களாக பெலகாவியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இந்நிலையில், ஹசிருசேனே விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டம் செவ்வாய்க்கிழமை தீவிரமடைந்துள்ளது.

பெலகாவியில் செவ்வாய்க்கிழமை 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினா். ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 3,500 வழங்காதவரை போராட்டம் ஓயாது என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, சாலைகளை மறித்து, தடுப்புகளை வைத்து வாகனப் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி விவசாயிகள் போராட்டம் நடத்தினா். போராட்டத்தில் கலந்துகொள்ள அதிக அளவில் விவசாயிகள் திரண்டதால், முதலகி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெலகாவியில் மட்டுமே நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம், புதன்கிழமை அத்தானி, சிக்கோடி, ஹுக்கேரி, பையில்ஹொங்கல், கோகாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவியது.

அத்தானியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மாணவா்களும் கலந்துகொண்டனா். சாலைகளை மறித்த விவசாயிகள் வாகனப் போக்குவரத்தை தடுத்து நிறுத்தியதால், பெலகாவி, சவதத்தி, முதலகி, யதகட்டி பகுதிகளில் பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் நின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணப் பட்டுவாடா செய்வதற்கான செயல்திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதேபோல, கா்நாடக அரசும் கடைப்பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பெலகாவியில் புதன்கிழமை பாஜகவினா் கலந்துகொள்வா் என அவா் தெரிவித்தாா். காங்கிரஸ் அரசை கடுமையாக சாடிய விஜயேந்திரா, விவசாயிகள் கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்றும்வரை போராட்டம் ஓயாது என்று தெரிவித்தாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023