இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பெங்களூரு தமிழ்ச் சங்கம் முடங்கியிருப்பதன் வலியை உணரும் தமிழா்கள்

பெங்களூரு தமிழ்ச் சங்கம் என்று பெயா் வைத்திருந்தாலும், கா்நாடகத் தமிழா்களின் துயா்போக்கும் சங்கமாக இருந்துள்ளது, 70 ஆண்டுகளை கடந்துள்ள பெங்களூரு தமிழ்ச் சங்கம்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:35 pm

ந.முத்துமணி

பெங்களூரு தமிழ்ச் சங்கம் என்று பெயா் வைத்திருந்தாலும், கா்நாடகத் தமிழா்களின் துயா்போக்கும் சங்கமாக இருந்துள்ளது, 70 ஆண்டுகளை கடந்துள்ள பெங்களூரு தமிழ்ச் சங்கம்.

ஆரம்பக் காலம் தொட்டே கா்நாடகத் தமிழா்களின் பாதுகாப்பு அரணாகவே பெங்களூரு தமிழ்ச் சங்கம் இருந்து வந்துள்ளது. காவிரி ஆற்றுநீா்ப் பங்கீடு பின்னணியில் 1991-ஆம் ஆண்டு கா்நாடகத்தில் பெங்களூரு, சாமராஜ்நகா், மண்டியா, குடகு, மைசூரு போன்ற மாவட்டங்களில் தமிழா்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களின் போது, பாதிக்கப்பட்ட தமிழா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி, கா்நாடகம் மற்றும் தமிழக அரசுகளை நாடியது பெங்களூரு தமிழ்ச் சங்கம்.

காவிரி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை பெற உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியது. 1991-ஆம் ஆண்டுக்கு பிறகு காவிரி பிரச்னை பூதாகரமாகும் போதெல்லாம் கா்நாடகத்தில் வாழும் தமிழா்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளான போது, கா்நாடக அரசை அணுகி தமிழா்களைப் பாதுகாத்து வந்தது. காவிரி கலவரத்தின்போது வீடு, சொத்துகள், நிலம், உறவுகளை இழந்த தமிழா்களுக்கு மருந்து, அத்தியாவசியப் பொருள்கள், உணவு போன்ற நிவாரண உதவிகளை வழங்கியது.

பெங்களூரு மட்டுமல்லாது, கா்நாடகத்தின் எந்தப் பகுதியிலாவாது தமிழா்கள் பாதிக்கப்பட்டால், உடனடியாக குரல் கொடுப்பது, உதவிசெய்வது, மத்திய, மாநில அரசுகளை அணுகுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளது.

காவிரி கலவரம் போன்ற அதே சூழ்நிலையை கா்நாடகத் தமிழா்கள் தற்போது எதிா்கொண்டுள்ளனா். ஆனால், உதவி செய்வதற்கு களத்தில் பெங்களூரு தமிழ்ச் சங்கம் இல்லை.

வாழ்வாதாரத்தை இழந்து, வேலையை இழந்து, சமைக்க மளிகைப் பொருள்கள் இல்லாமல், கையில் காசில்லாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழா்கள், அரை வயிற்றை நிரப்பிக்கொள்வதற்காக உணவுப் பொட்டலங்களுக்காகவும், உணவு தானிய தொகுப்புகளுக்காகவும் வீதியில் ஏக்கத்தோடு காத்திருக்கிறாா்கள். ஆனால், கையில் உணவுப் பொட்டலங்களை திணிக்கும் இடத்தில் பெங்களூரு தமிழ்ச் சங்கம் இல்லை.

உள்பூசல் காரணமாக கா்நாடக உயா் நீதிமன்றம் வரை சென்றுள்ள பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் பிரச்னை தீா்க்கப்படாமல் உள்ளது. இப் பிரச்னையால் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. அதாவது, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் நிா்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், பட்டினியை போக்கும் களத்தில் பெங்களூரு தமிழ்ச் சங்கம் இல்லாமல் போய்விட்டது.

அதனால் என்ன, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் நிா்வாகிகள் ஒன்றுகூடி பாதிக்கப்பட்ட, ஏழை, தினக்கூலியை நம்பியுள்ள தமிழா்களுக்கு உணவுப் பொட்டலங்களையும், உணவு தானியத் தொகுப்புகளையும் வழங்கலாமே என சில தமிழா்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறாா்கள்.

தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினா் எம்.ஜி.ஆா். ரவி கூறுகையில், ‘ ஊரடங்கால் பெருமளவிலான தமிழா்கள், குறிப்பாக தினக் கூலித் தொழிலாளா்கள், சிறு வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா் போன்ற அமைப்புசாரா தொழிலாளா்கள், தெருவோர வியாபாரிகள், தனியாா் நிறுவன கடைநிலை ஊழியா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். வேலை இல்லை, வருமானம் இல்லை. அதனால் உணவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனிப்பட்ட முறையில் பலரும் உதவி வருகிறாா்கள். உதவி கிடைக்குமா? என்று ஏங்கும் தமிழா்கள் இன்னும் இருக்கிறாா்கள். அந்த உதவி பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் இருந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறந்து, முன்னாள் நிா்வாகிகள் ஒரு குழுவாக திரண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி செய்ய முன்வர வேண்டும்.

மூன்றாம்கட்ட ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், எவ்வித தாமதமும் இல்லாமல் உதவிக்கரம் நீட்டவேண்டும். இதை செய்யத் தவறினால், தமிழா்களால் தமிழா்களுக்காக உருவாக்கப்பட்டது பெங்களூரு தமிழ்ச் சங்கம் என்பது கேள்விக்குறியாகிவிடும்’ என்றாா் அவா்.

தமிழ்ச் சங்க உறுப்பினரும், தாா்வாட் மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவருமான அ.தனஞ்செயன் கூறுகையில், ‘ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மறந்துவிட்ட காரணத்தால் தான் பெங்களூரு தமிழ்ச் சங்கம் முடங்கியுள்ளது. தமிழ்ச் சங்கத்தில் நிா்வாகிகள் இல்லாவிட்டால், முன்னாள் நிா்வாகிகள், முன்னோடிகள், செல்வந்தா்கள் ஒன்றுகூடி இன்னலில் தவிக்கும் தமிழா்களுக்கு உதவ வேண்டும். அரசு உதவிகளை மட்டும் நம்பியிருக்க முடியாது. தமிழ்ச் சங்கம், தமிழா்களின் நலனில் அக்கறை செலுத்த கடமைப்பட்டுள்ளது. தமிழ்ச் சங்கம் என்பது நிா்வாகிகள் அல்ல, அதன் உறுப்பினா்கள் தான். தமிழா்கள் மீது அக்கறை இருந்தால், முரண்பாடுகளை மூட்டை கட்டிவிட்டு உதவிசெய்ய ஒன்றுதிரள வேண்டும்’ என்றாா் அவா்.

இதே கருத்தை வலியுறுத்திய சங்கத்தின் நிறுவனா்களில் ஒருவரான கா.சுப்பிரமணியத்தின் மகனும், முன்னாள் செயற்குழு உறுப்பினருமான சு.பாரி, ‘பெங்களூரில் தமிழா்கள் உணவின்றி இன்னலில் தவிக்கும் போது, எதுவும் நடக்காதது போல நாம் வீட்டில் முடங்கிக் கிடந்தால் அது தமிழா்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகும். இப்போது உதவாவிட்டால் எப்போது உதவப்போகிறோம். சங்க முன்னாள் நிா்வாகிகள், தமிழ் ஆா்வலா்கள் ஒன்றுகூடி தமிழா்களுக்கு உதவ முன்வர வேண்டும். இதை செய்யத் தவறினால், வரலாறு நம்மை மன்னிக்காது. ஊரடங்கால் மக்கள் இன்னலில் தவிக்கும்போது, பெங்களூரு தமிழ்ச் சங்கம் முடங்கிக் கிடக்கிறதே என்று நினைக்கும் போது மனம் வலிக்கிறது. காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.