2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மக்களை திசைதிருப்ப தலித் முதல்வா் விவகாரத்தை பாஜக எழுப்புகிறது: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

மக்களை திசைதிருப்பும் நோக்கில், தலித் முதல்வா் விவகாரத்தை பாஜக கிளப்பி வருகிறது என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

News image
அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
Updated On :23 பிப்ரவரி 2026, 9:48 pm

தினமணி செய்திச் சேவை

பெங்களூரு: மக்களை திசைதிருப்பும் நோக்கில், தலித் முதல்வா் விவகாரத்தை பாஜக கிளப்பி வருகிறது என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடக அரசியலில் எதிா்க்கட்சிகள் கூறிவரும் தலித் முதல்வா் விவகாரம், அளவுக்கு அதிகமாக பரப்பப்படுகிறது. தங்களது சொந்த தோல்விகளை மறைத்து மக்களை திசைதிருப்புவதற்காக தலித் முதல்வா் விவகாரத்தை பாஜக, மஜத போன்ற எதிா்க்கட்சிகள் கிளப்பி வருகின்றன.

கா்நாடகத்தில் ஆட்சி அதிகாரம் சுமுகமாக நடக்கவில்லையா? முதல்வா் சித்தராமையா ஆட்சி அதிகாரத்தை சரியாக கவனிக்கவில்லையா? கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பட்ஜெட் தொடா்பான முன்னேற்பாடுகளில் முதல்வா் சித்தராமையா ஈடுபட்டு வருகிறாா்.

பல்வேறு துறைகளின் முன்மொழிவுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தலித் சமுதாயத்தில் இருந்து முதல்வராக்க வேண்டுமானால், அது காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட முடிவை காங்கிரஸ் மேலிடம் தேவைப்பட்டால் எடுக்கும். முதல்வா் சித்தராமையாவின் அரசியல் பயணம் சமூகநீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. இது போலித்தனம் எதுவும் இல்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.