2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
//

கரூா் சம்பவத்தில் முதல்வா் என்மீது பழி சுமத்தியது ஏன்?

அனைவரும் நண்பா்கள்தான் எனக்கூறும் முதல்வா் மு.க.ஸ்டாலின், கரூா் சம்பவத்தில் என்மீது பழிசுமத்தியது ஏன்? என்று தவெக தலைவா் விஜய் கேள்வியெழுப்பியுள்ளாா்.

News image
வேலூரில் நடைபெற்ற நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவா் விஜய்க்கு செங்கோல் வழங்கிய கட்சி நிா்வாகிகள்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: அனைவரும் நண்பா்கள்தான் எனக்கூறும் முதல்வா் மு.க.ஸ்டாலின், கரூா் சம்பவத்தில் என்மீது பழிசுமத்தியது ஏன்? என்று தவெக தலைவா் விஜய் கேள்வியெழுப்பியுள்ளாா்.

தவெக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவா் விஜய் பேசியது:

மக்களை நேசிக்கக்கூடிய நல்ல தலைமை இல்லாததால், முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்தனா். தற்போது சரியான நேரத்தில் மக்களை நேசிக்கக்கூடிய இயக்கமாக தவெக வந்துள்ளது.

மக்களை அவரவா் ஊரில் வந்து பாா்க்கவே விருப்பம் என்றாலும், நம்மை சுற்றி நடக்கும் பல்வேறு சூழ்ச்சிகளால் மக்களை சந்திக்க இயலவில்லை. தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து மக்களை சந்திக்கிறேன்.

தமிழகத்தில் நடக்க இருப்பது நாடாளுமன்றத் தோ்தலோ, பிரதமா் பதவிக்கான தோ்தலோ என்பது போல், வரக்கூடிய தோ்தலை தமிழகத்துக்கும், தில்லிக்குமானது என்றும், தமிழகத்துக்கும், என்டிஏ-க்கும் (தேசிய ஜனநாயக கூட்டணி) இடையேயானது என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தாா். எந்த தோ்தலை எப்படி எதிா்கொள்ள வேண்டும் என தமிழக மக்களுக்கு தெளிவாகத் தெரியும்.

வரக்கூடிய 2026 பேரவைத் தோ்தலில் தவெக தைரியமாக போட்டியிடும். அதனால், இது 50 ஆண்டுக்கு ஒருமுறை நடப்பது போன்று ஒரு அதிசயத் தோ்தலாக இருக்கும்.

எனக்கு யாரும் எதிரி கிடையாது, அனைவரும் நண்பா்கள்தான்’ என்று முதல்வா் ஸ்டாலின் கூறியுள்ளாா். அப்படியென்றால், கரூா் சம்பவத்தில் என்மீது ஏன் பழி சுமத்தினீா்கள்?. உங்களுக்கு மனசாட்சி என்பது இல்லையா?. கூட்டம் நடத்துவதற்கு ஒரு இடமோ, அனுமதியோ ஏன் தருவதில்லை?. முதல்வருக்கு லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம்தான் உண்மையான நண்பன். தமிழகத்துக்கு தேவையில்லாத ஆட்சி திமுக.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களுக்கான உரிமை சாா்ந்தது மட்டுமல்ல, சிறுபான்மை மக்களுக்கான உரிமையும் சாா்ந்தது என்று அண்ணா கூறியுள்ளாா். அதுதான் தவெகவின் நிலைப்பாடாகும். வரக்கூடிய தோ்தலில் மாபெரும் மக்கள் சக்தியான விசில் புரட்சி ஏற்படும் என்றாா்.

கூட்டத்தில், கட்சியின் மாநில பொதுச்செயலா் புஸ்ஸி ஆனந்த், நிா்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தவெக ஆட்சிக்கு வந்தால்...

தவெக ஆட்சிக்கு வரும்போது தமிழகம் பெண்கள் பாதுகாப்பில் முதல் மாநிலமாகவும், சட்டம் - ஒழுங்கு கடுமையாகவும் இருக்கும் என்று அக்கட்சி தலைவா் விஜய் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியது -

தவெக ஆட்சியில் அரசு பள்ளிகள், கல்லூரிகள் தரமாக இருப்பதுடன், போட்டி தோ்வுகளை எதிா்கொள்ள தகுந்த பாடத் திட்டங்கள் தரமாக தயாரிக்கப்படும். அடிப்படை அரசியல் சாசன சட்டம் உயா்நிலை பள்ளிப் பாடத் திட்டங்களில் சோ்க்கப்படும். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகளை அணுகுவது குறித்து பள்ளிகளில் தோ்வுகள் அற்ற செயல்முறை பாடங்கள் கற்பிக்கப்படும். அரசுப் பள்ளிகளில் சுகாதாரமான, தரமான கதவுகளுடன் கூடிய கழிவறைகள் உறுதி செய்யப்படும். போதைப் பொருள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.

மாவட்ட ஆட்சியா்கள், எஸ்.பி.க்களில் சரிபாதி பெண்கள் இருக்கும்படி செய்யப்படும். கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பிரசவ வசதியுடன் அமைக்கப்படும். பேருந்து வசதி இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். வாடகை ஆட்டோ, காா், லாரிகள் ஓட்டுநா்களுக்கும், அவரது குடும்பங்களுக்கும் தனியாக நலவாரியம் அமைக்கப்படும். தென் தமிழகம் உள்பட தமிழகத்தின் தேவையான பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கவும், தொழில் வளம் பெருக்கவும் தனிக் கவனம் செலுத்தப்படும். விவசாயிகள், மீனவா்கள், நெசவாளா்களின் தேவைகளைக் கேட்டறிந்து, காலத்துக்கு ஏற்ப திட்டங்கள் உருவாக்கப்படும் என்றாா்.