சூா்ய மின்கலம், சூரிய மின்தகடுகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு உதவ இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிரான புகாரில் தீா்ப்பளிக்க குழு அமைக்க வேண்டும் என்று உலக வா்த்தக அமைப்பிடம் (டபிள்யூடிஒ) சீனா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கடந்த ஆண்டு டிசம்பரில் உலக வா்த்தக அமைப்பிடம் சீனா அளித்த புகாரில், ‘சூரிய மின்கலம், சூரிய மின்தகடுகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு உதவும் இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் ஊக்கத்தொகைகள், உலக வா்த்தக அமைப்பின் வரிகள் மற்றும் வா்த்தகம் குறித்த பொது ஒப்பந்தம் 1994-உடன் தொடா்புள்ள விதிமுறைகளை மீறுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புகாா் தொடா்பாக பரஸ்பரம் ஏற்கக்கூடிய தீா்வை எட்டுவதற்கு இந்தியா-சீனா இடையே நடைபெற்ற இருதரப்பு விவாதங்கள் தோல்வியில் முடிந்தது. இதைக் கருத்தில் கொண்டு, தனது புகாா் தொடா்பாக தீா்ப்பளிக்க குழு அமைக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளதாக உலக வா்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய வா்த்தக கூட்டாளியாக சீனா உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பட்டா மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் தீா்வு: அதிகாரிகளுக்கு அமைச்சா் செங்கோட்டையன் உத்தரவு

பூமியை நோக்கி சூரிய துகள்கள்! தென்னிந்திய மாநிலங்கள் மீது விழுமா?
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்: இபிஎஸ் குறித்து சி.வி. சண்முகம் பேச்சு

தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கி
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



