மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆப்கனில் கடும் வெள்ளம்: 17 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் காரணமாக 17 பேர் பலியானது பற்றி...

News image

ஆப்கன் வெள்ள பாதிப்பு - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 12:42 pm

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் காரணமாக 17 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் மோசமான வானிலை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், 26 பேர் காயமடைந்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெள்ளத்தின் காரணமாக ஆப்கனில் உள்ள 34 மாகாணங்களில் மேற்கு, மத்திய மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள 12 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, 147 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 80 கி.மீ தொலைவிலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் யூசுப் ஹம்மாத் தெரிவித்தார்.

இந்தாண்டின் தொடக்கத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் வெள்ளத்தின் காரணமாக பலர் பலியான நிலையில் மீண்டும் ஆப்கனில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் கடுமையான வானிலையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடு. அங்கு ஏற்படும் கனமழை, வெள்ளம் காரணமாக பல நூறு மக்கள் வரை பலியாகும் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 2024-ம் ஆண்டில் கூட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக நடைபெறும் மோதலகள், மோசமான உள்கட்டமைப்பு, சீரற்ற பொருளாதாரம், காடுகள் அழிக்கப்பட்டது மற்றும் மோசமான காலநிலை மாற்றம் ஆகியவற்றால் ஆப்கானிஸ்தானில் பேரிடர்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, அங்கு பல வீடுகள் மண்ணால் கட்டப்பட்டுள்ளதால் திடீர் பெருவெள்ளம் அல்லது கடும் பனிப்பொழிவு போன்ற பேரிடர்களில் இருந்து மிகக் குறைந்த பாதுகாப்பையே அவை வழங்குகின்றன.

Summary

Extreme weather in Afghanistan leaves 17 people dead

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.