மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சௌதி அரேபியா - உக்ரைன் இடையே வான் பாதுகாப்பு ஒப்பந்தம்!

சௌதி அரேபியா மற்றும் உக்ரைன் இடையே வான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறித்து...

News image

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி - சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்... - எக்ஸ்

Updated On :27 மார்ச் 2026, 11:28 am

சௌதி அரேபியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே வான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

உக்ரைனின் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி அரசு முறைப் பயணமாக சௌதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில், சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை அவர் நேரில் சந்தித்து உரையாடினார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக சௌதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அவர்களின் ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்தத் தாக்குதலில், ஈரான் வீசும் ட்ரோன்களை இடைமறித்து தகர்க்க, 4 ஆண்டுகளாக ரஷியா உடன் நடைபெற்று வரும் போரில் உக்ரைன் பயன்படுத்தி வரும் வான் பாதுகாப்பு அமைப்புகள் வளைகுடா நாடுகளில் களமிறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரானிய ட்ரோன்களை இடைமறிக்க வளைகுடா நாடுகள் வீசும் மிக அதிக விலை கொண்ட ஏவுகணைகளுக்குப் பதிலாக உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்த வேண்டுமென அதிபர் ஸெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார். மேலும், வளைகுடா நாடுகளின் ஏவுகணைகளை ரஷியாவுக்கு எதிரான போரில் பயன்படுத்த அவர் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சௌதி அரேபியா மற்றும் உக்ரைன் இடையில் வான் பாதுகாப்பு அமைப்பைக் கட்டமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) அன்று கையெழுத்தானதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், சௌதி அரேபியாவில் களமிறக்கப்பட்டுள்ள உக்ரைனின் வான் பாதுகாப்பு நிபுணர்களையும் அவர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

ஏற்கெனவே, சௌதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் முக்கிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

An air defense agreement has been signed between Saudi Arabia and Ukraine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.