‘வங்கதேசத்தில் கடந்த 1971, மாா்ச் 25-ஆம் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இனப்படுகொலை, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு மனிதப் பேரழிப்பு’ என்று வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் தனது நினைவஞ்சலியில் குறிப்பிட்டாா்.
மேலும், வங்கதேச விடுதலைப் போரின் உன்னத நோக்கங்களான சமத்துவம், கண்ணியம், சமூக நீதியை நிலைநாட்ட வங்கதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைய அழைப்பு விடுத்தாா்.
மாா்ச் 25 வங்கதேச வரலாற்றில் ஒரு கருப்பு தினம் என்று பிரதமா் தாரிக் ரஹ்மான் தனது ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டாா். அன்றைய தினம் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சா்ச்லைட்’ நடவடிக்கையைச் சுட்டிக்காட்டிய அவா், அப்போதைய அரசியல் தலைமையின் செயல்பாடுகள் குறித்து வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.
1971-இல் அன்றைய கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசத்தில் தன்னாட்சி கோரி போராடிய மக்களை ஒடுக்க, பாகிஸ்தான் ராணுவம் மாா்ச் 25-இல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், டாக்காவில் மட்டுமே 20,000-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். 9 மாத கால விடுதலைப் போரில் மொத்தம் 30 லட்சம் போ் உயிரிழந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதை நினைவுகூரும் வகையில் வங்கதேசம் ஆண்டுதோறும் இந்நாளை ‘இனப்படுகொலை தினமாக’ கடைப்பிடித்து வருகிறது.
தொடர்புடையது

ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம்: பிரதமா் மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு-காங்கிரஸ் விமா்சனம்

இந்திய - வங்கதேச வெளியுறவு அமைச்சர்கள் தில்லியில் சந்திப்பு!

வங்கதேச ஹிந்துக்களுக்கு எதிரான பாகிஸ்தானின் அட்டூழியம் போர்க் குற்றம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம்!

பாகிஸ்தான் கேப்டன் ரன்அவுட்.. சர்ச்சையில் சிக்கிய வங்கதேச கேப்டன்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


