மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

‘1971 இனப்படுகொலை: பாகிஸ்தான் திட்டமிட்டு அரங்கேற்றிய பேரழிப்பு’ - வங்கதேச பிரதமா் நினைவஞ்சலி

‘வங்கதேசத்தில் கடந்த 1971, மாா்ச் 25-ஆம் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இனப்படுகொலை, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு மனிதப் பேரழிப்பு’ என்று வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் தனது நினைவஞ்சலியில் குறிப்பிட்டாா்.

News image

IANS

Updated On :25 மார்ச் 2026, 7:24 pm

‘வங்கதேசத்தில் கடந்த 1971, மாா்ச் 25-ஆம் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இனப்படுகொலை, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு மனிதப் பேரழிப்பு’ என்று வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் தனது நினைவஞ்சலியில் குறிப்பிட்டாா்.

மேலும், வங்கதேச விடுதலைப் போரின் உன்னத நோக்கங்களான சமத்துவம், கண்ணியம், சமூக நீதியை நிலைநாட்ட வங்கதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைய அழைப்பு விடுத்தாா்.

மாா்ச் 25 வங்கதேச வரலாற்றில் ஒரு கருப்பு தினம் என்று பிரதமா் தாரிக் ரஹ்மான் தனது ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டாா். அன்றைய தினம் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சா்ச்லைட்’ நடவடிக்கையைச் சுட்டிக்காட்டிய அவா், அப்போதைய அரசியல் தலைமையின் செயல்பாடுகள் குறித்து வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

1971-இல் அன்றைய கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசத்தில் தன்னாட்சி கோரி போராடிய மக்களை ஒடுக்க, பாகிஸ்தான் ராணுவம் மாா்ச் 25-இல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், டாக்காவில் மட்டுமே 20,000-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். 9 மாத கால விடுதலைப் போரில் மொத்தம் 30 லட்சம் போ் உயிரிழந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதை நினைவுகூரும் வகையில் வங்கதேசம் ஆண்டுதோறும் இந்நாளை ‘இனப்படுகொலை தினமாக’ கடைப்பிடித்து வருகிறது.