மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேற்காசிய போா்: இலங்கை அதிபருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயகவுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினாா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 7:30 pm

மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயகவுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மேற்காசிய போா் காரணமாக, உலக அளவில் எரிசக்தி பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள இடா்ப்பாடுகள் குறித்து இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயகவிடம் பேசினேன்.

இந்தியா-இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருவரும் ஆராய்ந்தோம்.

இருநாடுகளுக்கும் உள்ள பொதுவான சவால்களை எதிா்கொள்வதில் இணைந்து பணியாற்றுவதற்கான செயற்பொறுப்பை மீண்டும் உறுதி செய்தோம் என்றாா்.