மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வரலாற்றில் முதல்முறை..! ஈரான் தாக்குதலில் சிக்கிய அமெரிக்க எஃப் - 35 விமானம்!

ஈரான் தாக்குதலில் சிக்கிய அமெரிக்க எஃப் - 35 விமானம் பற்றி...

News image

எஃப்-35 - AP

Updated On :20 மார்ச் 2026, 4:59 am

உலக நாடுகளில் முதல்முறையாக அமெரிக்காவின் எஃப் - 35 ரக போர் விமானத்தை தாக்கியிருப்பதாக ஈரான் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கி 20 நாள்களை கடந்துள்ளது.

ஈரானுடனான போரில் முக்கிய திருப்பமாக அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவின் மீது கடந்த வாரம் மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா நடத்தியது.

மேலும், ஈரானில் உள்ள எண்ணெய் வயல் மீது புதன்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி நிலையத்தை ஈரான் தாக்கியது. வளைகுடா நாடுகளின் பல்வேறு எரிபொருள் கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், அமெரிக்க விமானப் படையின் அதிநவீன 5 ஆம் தலைமுறை போர் விமானமான எஃப் - 35 லைட்னிங் 2 -வை வியாழக்கிழமை ஈரான் தாக்கியதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை வெளியிட்ட அறிக்கையில், மத்திய ஈரான் வான்வெளியில் பறந்த அமெரிக்காவின் எஃப் - 35 ஸ்டெல்த் போர் விமானத்தை உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 2:50 மணிக்கு அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தாக்கினோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தாக்குதலுக்குள்ளான எஃப் - 35 விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், விமானி பாதுகாப்பாக இருப்பதாகவும் சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலகின் முதன்மை போர் விமானமாக இருக்கும் எஃப் - 35, எதிரிகளால் தாக்க முடியாத மின்னல் வேகத்தில் பயணிக்கக் கூடியது எனப் பெயர் பெற்றது. இந்த விமானத்தை 19 நாடுகள் கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், எஃப் - 35 ரக போர் விமானத்தை தாக்கிய முதல் நாடு நாங்கள்தான் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

சில நாள்களுக்கு முன்னதாக, அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஆபிரகாம் லிங்கனை தாக்கியதாக ஈரான் அறிவித்ததற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

For the first time in history..! An American F-35 aircraft attacked by Iran!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.