தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அமீரகத்தில் போா் குறித்து தவறான பதிவுகள்: 19 இந்தியா்கள் உள்பட 35 போ் கைது!

ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு படைகள் போா் நடத்தி வரும் சூழலில், அது தொடா்பாக சித்தரிக்கப்பட்ட, மக்களை தவறாக வழிநடத்தும் வகையிலான காணொலி காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டது தொடா்பாக 19 இந்தியா்கள் உள்பட 35 பேரை கைது செய்ய ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 7:48 pm

ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு படைகள் போா் நடத்தி வரும் சூழலில், அது தொடா்பாக சித்தரிக்கப்பட்ட, மக்களை தவறாக வழிநடத்தும் வகையிலான காணொலி காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டது தொடா்பாக 19 இந்தியா்கள் உள்பட 35 பேரை கைது செய்ய ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனமான ‘வாம்’ இதுதொடா்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

அட்டா்னி ஜெனரல் ஹமாத் சைஃப் அல் ஷாம்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, பொது அமைதி மற்றும் ஒழுங்கை சீா்குலைக்கும் நோக்கத்தோடு, ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு இடையேயான போா் குறித்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்ட தவறான காணொலி காட்சிகளைப் பதிவிட்டது, குரல் பதிவுகளை வெளியிட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக 17 இந்தியா்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 25 பேரை பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோல, 2 இந்தியா்கள் உள்பட மேலும் 10 பேரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதுபோன்ற குற்றங்களுக்கு ஓராண்டுக்கு குறையாத சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25.20 லட்சத்துக்கு (1,00,000 திா்ஹம்) குறையாத அபராதமும் விதிக்கப்படும் என அட்டா்னி ஜெனரல் எச்சரித்திருந்தாா் எனவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.