மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

வெனிசுவேலா நிலநடுக்கம்! குழந்தை முதல் நாய்க்குட்டி வரை! மீட்புப் பணிக்கு நம்பிக்கை

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் சிக்கிய குழந்தை முதல் நாய்க்குட்டி வரை உயிருடன் மீட்கப்பட்டு நம்பிக்கை கொடுத்தது பற்றி..

News image

Javier Campos

Updated On :26 ஜூன் 2026, 10:53 am IST

வெனிசுவேலாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தையும், நாய்க்குட்டி ஒன்றும் மீட்கப்பட்ட தருணங்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கும் மக்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாட்டின் வடக்கு மாகாணமான லா குவாரியா உள்ளிட்ட இடங்களில் மீட்புப் படையினரும், அவசர உதவிப் பிரிவினரும் விரைந்துள்ளனர். அங்கு இடிபாடுகளுக்குள் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்று தேடுதல் பணி தொடர்கிறது.

Story image

Javier Campos

கடுமையான சூழலில் மீட்புப் பணியினர் ஈடுபட்டு வந்த நிலையில், இடிபாடுகளுக்குள் ஒரு குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்ட தருணத்தை மீட்புப் படை வீரர்கள் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் விட்டு அழுதனர். குழந்தைக்கு உடலில் சிறு காயங்கள் கூட ஏற்படாதது அவர்களுக்கு நிம்மதியை கொடுத்தது.

இது, இடிபாடுகளுக்குள் யாரேனும் உயிருடன் இருக்க வாய்ப்பிருக்கலாம், அவர்களைத் தேடி உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.

அதுபோல, பொலிவரியன் பகுதியில் ஒரு குழந்தையும், மற்றொரு இடிபாடுகளுக்குள் இருந்து 12 வயத சிறுவனும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றொரு பகுதியிலிருந்து பெண் ஒருவரும் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்புப் பணியின்போது, இடிபாடுகளுக்குள் இருந்த நாய் ஒன்றையும் அவர்கள் கண்டனர். முதலில் அதற்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி, பிறகு இடிபாடுகளை அகற்றி அதனை மீட்டனர்.

மற்றொரு விடியோவில், நிலநடுக்கத்தில் சிக்கி மருத்துவமனைக்கு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்மணி, வேறொரு கட்டடத்திலிருந்து மீட்கப்பட்டு அழைத்துவரப்பட்ட தன்னுடைய மகனைப் பார்த்து கண்ணீர் விட்ட விடியோக்களும் வெளியாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.