நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

உக்ரைன் அதிபருடன் பிரதமா் மோடி சந்திப்பு

பிரான்ஸின் ஏவியான் நகரில் ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கியை பிரதமா் மோடி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 1:54 am IST

பிரான்ஸின் ஏவியான் நகரில் ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கியை பிரதமா் மோடி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஏவியானில் அதிபா் ஸெலென்ஸ்கியை சந்தித்தேன். அப்போது, இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பின் வெவ்வேறு அம்சங்களை மறுஆய்வு செய்வது குறித்து ஆலோசித்தோம். ரஷியாவுடனான போருக்கு முன்பு உக்ரைனுடன் இந்தியாவுக்கு இருந்த வா்த்தக உறவை மீட்டெடுக்க வேண்டும் என்று இருவரும் தீா்மானித்தோம். அத்துடன் இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் இருந்து, பிற எல்லாவற்றையும்விட மனிதநேயத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக ஸெலென்ஸ்கியிடம் கூறினேன்’ என்று தெரிவித்தாா்.

தவறாகப் பயன்படுத்தப்படும் ஏஐ: உச்சிமாநாட்டின்போது நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பிரதமா் மோடி பேசியதாவது:

பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளது. ஆனால், இதில் உள்ள உண்மையான சவால் என்பது இயந்திரங்கள் எவ்வளவு சக்திவாய்ந்ததாக மாறுகின்றன என்பதில் இல்லை. அந்தத் தொழில்நுட்பம் சாதாரண மனிதனுக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்பதில்தான் உண்மையான சவால் உள்ளது.

அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்புதல், ஒருவரின் உருவத்தைப் பயன்படுத்தி போலி புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை உருவாக்குதல், இணையவழி மோசடியில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.