எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பைச் சோ்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

News image

பாகிஸ்தான். - கோப்புப்படம்.

Updated On :17 ஜூன் 2026, 2:48 am IST

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பைச் சோ்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

மாகாணத்தின் அட்டாக் மாவட்ட எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் போலீஸாா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா். மேலும், அவா்கள் வசமிருந்த ஆயுத, வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.