டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சிலியில் காட்டுத் தீ: 18 பேர் பலி; அவசரநிலை அறிவிப்பு!

சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீ பற்றி..

News image
காட்டுத் தீ
Updated On :19 ஜனவரி 2026, 12:12 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சிலி நாட்டில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் அவசரநிலையை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சிலியின் வனத்துறை அமைப்பு கூறுகையில்,

நாடு முழுவதும் 24 இடங்களில் காட்டுத் தீ தீவிரமாக எரிந்து கொண்டிருந்தது. மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் நுப்ளே மற்றும் பயோபியோ பிராந்தியங்களில் அந்நாட்டு அரசு அவசரநிலையை அறிவித்துள்ளது. இந்த பிராந்தியங்கள் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து சுமார் 500 கி.மீ.(310 மைல்) தெற்கே அமைந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப் பகுதிகள் தீயில் எரிந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும் எரிந்து நாசமாகியுள்ளன.

தீ விபத்தில் இதுவரை 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை 2 பிராந்தியங்களிலும் கிட்டத்தட்ட 8,500 ஹெக்டேர் (21,000 ஏக்கர்) நிலப்பரப்பு தீக்கிரையாக்கியுள்ளது.

பலத்த காற்று மற்றும் அதிக வெப்பநிலை உள்ளிட்ட பாதகமான சூழ்நிலைகள், காட்டுத் தீ பரவ காரணமாக அமைந்தது. தீயைக் கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. சிலியின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான வெப்ப அலை வீசி வருகின்றது.

தென் அமெரிக்க நாடான சிலியில், வறட்சி மற்றும் வெள்ளம் உள்பட காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், சமீபத்திய ஆண்டுகளில் சிலியின் தென்-மத்திய பகுதிகள் காட்டுத் தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

summary

Chilean President Gabriel Boric declared a state of catastrophe in two southern regions on Sunday, as raging wildfires forced more than 50,000 people to evacuate and killed at least 18 people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.