டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பாகிஸ்தானில் 11 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து...

News image
பாகிஸ்தானில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்...- (கோப்புப் படம்)
Updated On :10 ஜனவரி 2026, 6:48 am

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானில், 11 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் கடந்த ஜன. 8 ஆம் தேதி பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில், தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் எனும் அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதேபோல், குர்ராம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் கூட்டு நடவடிக்கையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது முதல் பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.