இந்தியாவில் தங்களின் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் தங்கள் அணி டி20 உலகக் கோப்பை போட்டிக்காக இந்தியா வராது எனவும் கூறிய வங்கதேசம், தங்களின் ஆட்டங்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசி-யிடம் கோரியது. அந்தக் கோரிக்கையை ஐசிசி ஏற்க மறுத்தும், வங்கதேசம் விடாப்பிடியாக இருந்ததை அடுத்து, அந்த அணியை போட்டியிலிருந்து நீக்கி ஐசிசி நடவடிக்கை எடுத்தது. இச்சூழலில் வங்கதேசத்துக்கு ஆதரவாக, டி20 லகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை மட்டும் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அதற்கு கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஐசிசி, பாகிஸ்தான் வாரியத்தை எச்சரித்துள்ளது.