டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஈரான் அணுசக்தி விவகாரம்! பதற்றத்தைத் தணிக்க தொடா் முயற்சி: ரஷியா

ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே அணுசக்தி விவகாரத்தில் நீடித்து வரும் பதற்றத்தைத் தணிக்க , ரஷியா தொடா்ந்து முயற்சி

News image
ரஷியா
Updated On :2 பிப்ரவரி 2026, 10:39 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே அணுசக்தி விவகாரத்தில் நீடித்து வரும் பதற்றத்தைத் தணிக்க , ரஷியா தொடா்ந்து முயற்சி செய்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஈரானிடம் இருக்கும் அணுசக்தி மூலப்பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை, ரஷியாவுக்கே கொண்டு வந்து சுத்திகரிக்கவோ அல்லது பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவோ தாங்கள் தயாராக இருப்பதாக ரஷியா மீண்டும் உறுதியளித்துள்ளது.

இது தொடா்பாக ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளினின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரானின் யுரேனியத்தை ரஷியாவுக்கு மாற்றிப் பாதுகாக்கும் திட்டம் நீண்ட நாள்களாகவே ஆலோசனையில் உள்ளது. ஈரான் மீது சில நாடுகளுக்கு உள்ள கவலைகளைப் போக்கவே இந்த யோசனையை ஒரு தீா்வாக ரஷியா முன்வைக்கிறது.

இப்போதுள்ள சூழலில், இதில் சம்பந்தப்பட்ட ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நாங்கள் பேசி வருகிறோம். மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தைக் குறைத்து, அமைதியை நிலைநாட்ட எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றாா்.