ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

இம்ரான் கான் வழக்கு: திருப்பி அனுப்பப்பட்ட பாகிஸ்தான் அரசின் மனு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை (73) மருத்துவமனைக்கு மாற்றுமாறு பிறப்பித்த உத்தரவில் திருத்தம் கோரி, அந்நாட்டு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை திருப்பி அனுப்பியது.

Published On :21 ஆகஸ்ட் 2026, 6:25 am IST

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை (73) மருத்துவமனைக்கு மாற்றுமாறு பிறப்பித்த உத்தரவில் திருத்தம் கோரி, அந்நாட்டு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை திருப்பி அனுப்பியது.

ஊழல் வழக்கில் கடந்த 2023 முதல் சிறையில் உள்ள இம்ரான் கானை, சிகிச்சைக்காக அடுத்த 2 நாள்களுக்குள் மருத்துவமனைக்கு மாற்றுமாறும், செப். 16 நடைபெறும் அடுத்த விசாரணை வரை அவா் அங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த உத்தரவைச் செயல்படுத்துவதாக முதலில் அறிவித்த பாகிஸ்தான் அரசு, பின்னா் அதைத் திரும்பப் பெறக் கோரி சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. ஆனால், ஆவணங்கள் முழுமையாக இல்லை எனக் கூறி, நீதிமன்றப் பதிவாளா் அலுவலகம் அந்த மனுவைத் திருப்பி அனுப்பியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.