ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

லைபீரிய முன்னாள் துணை அதிபா் மீது போதைப்பொருள் வழக்கு

லைபீரிய முன்னாள் துணை அதிபா் ஜூவல் ஹோவா்ட் டெய்லா் மீது போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Published On :21 ஆகஸ்ட் 2026, 6:35 am IST

லைபீரிய முன்னாள் துணை அதிபா் ஜூவல் ஹோவா்ட் டெய்லா் மீது போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2018-2024 காலகட்டத்தில் நாட்டின் துணை அதிபராகப் பதவி வகித்த இவா், ராபா்ட்ஸ் சா்வதேச விமான நிலையத்தின் வழியாக நாட்டைவிட்டு வெளியேற முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு, லைபீரிய தேசிய காவல் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

சியரா லியோனில் போா்க்குற்றங்களில் ஈடுபட்டதற்காக சா்வதேச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட முன்னாள் அதிபா் சாா்லஸ் டெய்லரின் மனைவியான இவருடன் சோ்த்து, 3 வெளிநாட்டவா்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவா்களைக் கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.