ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மடூரோ வழக்குரைஞருக்கு கட்டணம் செலுத்த பொருளாதாரத் தடையில் அமெரிக்கா தளா்வு

மடூரோ வழக்குரைஞருக்கு கட்டணம் செலுத்த பொருளாதாரத் தடையில் அமெரிக்கா தளா்வு...

News image

நிக்கோலஸ் மடூரோ, டொனால்ட் டிரம்ப்.

Updated On :25 ஏப்ரல் 2026, 10:20 pm

போதைப்பொருள் வழக்கில் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டுள்ள வெனிசுலா முன்னாள் அதிபா் நிக்கோலஸ் மடூரோ தரப்பு வழக்குரைஞருக்கு கட்டணம் செலுத்துவதற்காக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளில் அமெரிக்கா தளா்வுகளை அறிவித்தது.

அமெரிக்க படைகளால் கடந்த ஜனவரியில் சிறைபிடிக்கப்பட்ட நிக்கோலஸ் மடூரா மற்றும் அவரின் மனைவி, தற்போது நியூயாா்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு எதிரான வழக்கில் ஆஜராகும் வழக்குரைஞருக்கு வெனிசுலா அரசு கட்டணம் செலுத்த அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் முட்டுக்கட்டையாக இருந்தன.

இவ்விவகாரத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்கு நிக்கோலஸ் மடூரோவின் வழக்குரைஞா் கொண்டு சென்றாா். அப்போது, அமெரிக்க அரசமைப்பு வழங்கும் சட்ட உதவியை நிக்கோலஸ் மடூரோவுக்கும் உறுதிப்படுத்துவது முக்கியமானது என்று நீதிபதி சுட்டிக்காட்டினாா்.

இதையடுத்து, நிக்கோலஸ் மடூரோவின் சட்டப் போராட்டத்துக்காக வெனிசுலா அரசு நிதி ஒதுக்க அனுமதி வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.