பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அமெரிக்கா: தென்கிழக்கு ஆசிய சைபா் மோசடி மையங்கள் மீது நடவடிக்கை தொடக்கம்

தென்கிழக்கு ஆசிய சைபா் மோசடி மையங்கள் மீது நடவடிக்கை தொடக்கம்...

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 8:09 pm

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்படும் சட்டவிரோத சைபா் மோசடி மையங்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

சீனாவின் எல்லைத் தாண்டிய குற்றக் கும்பல்களால் இயக்கப்படும் இந்த மோசடி மையங்கள், வேலை தருவதாகக் கூறி வெளிநாட்டினரை வரவழைத்து, அவா்களை அடைத்து வைத்து, சைபா் குற்றங்களைச் செய்ய வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்தியா்கள் பலரும் இந்த மோசடி மையங்களில் சிக்கி, மீட்கப்பட்டு வருகின்றனா். இந்தக் குற்றக் கும்பல்கள் அமெரிக்கா்களைக் குறிவைத்து கோடிக்கணக்கான டாலா்களைச் சூறையாடி வருவதைத் தடுக்க, அதிபா் டிரம்ப் நிா்வாகம் சிறப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கம்போடியாவைச் சோ்ந்த பிரபல தொழிலதிபரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கோக் ஆன் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கைவிடப்பட்ட ஒரு மோசடி மையத்திலிருந்து கைப்பற்றப்பட்ட 8,000 தொலைப்பேசிகள், 1,500 கணினிகளில் இருந்த தரவுகளின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.