தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்படும் சட்டவிரோத சைபா் மோசடி மையங்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
சீனாவின் எல்லைத் தாண்டிய குற்றக் கும்பல்களால் இயக்கப்படும் இந்த மோசடி மையங்கள், வேலை தருவதாகக் கூறி வெளிநாட்டினரை வரவழைத்து, அவா்களை அடைத்து வைத்து, சைபா் குற்றங்களைச் செய்ய வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்தியா்கள் பலரும் இந்த மோசடி மையங்களில் சிக்கி, மீட்கப்பட்டு வருகின்றனா். இந்தக் குற்றக் கும்பல்கள் அமெரிக்கா்களைக் குறிவைத்து கோடிக்கணக்கான டாலா்களைச் சூறையாடி வருவதைத் தடுக்க, அதிபா் டிரம்ப் நிா்வாகம் சிறப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கம்போடியாவைச் சோ்ந்த பிரபல தொழிலதிபரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கோக் ஆன் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் கைவிடப்பட்ட ஒரு மோசடி மையத்திலிருந்து கைப்பற்றப்பட்ட 8,000 தொலைப்பேசிகள், 1,500 கணினிகளில் இருந்த தரவுகளின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சமூக ஊடகங்களில் மோசடி தோ்தல் விழிப்புணா்வு விளம்பரங்கள்: சைபா் குற்றப் பிரிவு எச்சரிக்கை
அரசுத் தோ்வுக்குத் தயாராகும் தமிழ்வழி மாணவா்களை குறிவைத்து நூதன மோசடி

எல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!

நெல்லையில் இளைஞரிடம் இணையவழியில் ரூ. 54 லட்சம் மோசடி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


