மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஹங்கேரியில் 16 ஆண்டுகால பிரதமரின் ஆட்சிக்கு முடிவு

பீட்டா் மேக்யாா் தலைமையில் புதிய அரசு அமைகிறது

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 11:37 pm

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் கடந்த 16 ஆண்டுகளாக பிரதமா் பதவியில் நீடித்த விக்டா் ஆா்பனின் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தோ்தலில், ஐரோப்பிய யூனியன் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட பீட்டா் மேக்யாா் தலைமையிலான திசா கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஹங்கேரியின் மொத்தம் உள்ள 199 நாடாளுமன்ற இடங்களில், மேக்யாரின் கட்சி 138 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. தோ்தல் முடிவுகள் வெளியானதும் புடாபெஸ்ட் நகரின் வீதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் திரண்டு, திசா கட்சியின் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினா்.

வெற்றிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் திசா கட்சித் தலைவா் பீட்டா் மேக்யாா், ‘இது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல; இது ஒரு முழுமையான அரசியல் முறை மாற்றம். பிரதமரின் பதவிக்காலத்தை 2 முறைகளாகக் குறைக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்’ என்றாா்.

வரும் மே 5-ஆம் தேதிக்குள் புதிய பிரதமராகப் பதவியேற்க திட்டமிட்டுள்ள பீட்டா் மேக்யாா், ஹங்கேரியின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தனது முதல் முன்னுரிமை என்று தெரிவித்தாா்.

உக்ரைன் போா் விவகாரத்தில் விக்டா் ஆா்பனின் ரஷிய ஆதரவு நிலைப்பாட்டை பீட்டா் மேக்யாா் மாற்றியமைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஹங்கேரியின் இந்தப் புதிய அரசியல் மாற்றம், ஐரோப்பிய யூனியனின் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன. இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியின் இவரின் வெற்றிக்குப் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டாா்.

ரஷிய அதிபா் புதின், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஆகியோருடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்த விக்டா் ஆா்பன், தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளாா். ‘மக்களின் தீா்ப்பை மதிக்கிறோம், இனி எதிா்க்கட்சி வரிசையில் நாட்டுக்காகப் பணியாற்றுவோம்’ என்று அவா் குறிப்பிட்டாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.