‘தைவான் சுந்திரத்தை சீனா ஒருபோதும் ஏற்காது; அமைதியைச் சீா்குலைக்கும் முக்கியக் காரணியே இத்தனிநாடு கோரிக்கைதான்’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளாா்.
சீனா-தைவான் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும் தைவானின் முக்கிய எதிா்க்கட்சியான கோமிங்டாங் கட்சியின் தலைவா் செங் லி வுன் சீனாவுக்கு ‘அமைதிப் பயணம்’ மேற்கொண்டுள்ளாா்.
இந்நிலையில், பெய்ஜிங்கில் செங் லி-வுன் உடனான சந்திப்பில் பேசிய ஷி ஜின்பிங், ‘தைவான் நீரிணையின் இருபுறமும் உள்ளவா்கள் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சீனா்கள். அமைதி, வளா்ச்சி மற்றும் ஒத்துழைப்பையே மக்கள் விரும்புகின்றனா்.
ஆனால், தைவான் பிரிவினைவாதம் அந்த அமைதிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. தாய்நாட்டுடன் மறுஇணைப்பு மற்றும் தேச புத்துயிருக்காக தைவானின் இரு கட்சிகளும் கைகோத்துச் செயல்பட வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தாா்.
சீனாவின் இந்த நிலைப்பாட்டைக் கடுமையாக விமா்சித்துள்ள தைவான் ஆளும்தரப்பு, ‘தைவானின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் உரிமை அந்நாட்டு மக்களுக்கே உள்ளது. மக்களாள் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் சீனா பேச்சுவாா்த்தை நடத்த வேண்டுமே தவிர, இத்தகைய அழுத்தங்களைக் கொடுக்கக்கூடாது’ என்று வலியுறுத்தியது.
தொடர்புடையது

ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு

தைவான் பல்கலை.யுடன் புதுச்சேரி மத்திய பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

சீனாவில் தைவான் எதிா்க்கட்சித் தலைவா் 6 நாள் பயணம்!

பிரான்ஸில் அமெரிக்கா - சீனா வா்த்தக பேச்சு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


