மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நைஜீரியாவில் ஈஸ்டா் வாரஇறுதி தாக்குதல்கள்: 26 போ் உயிரிழப்பு

நைஜீரியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஈஸ்டா் வார இறுதியில் நடத்தப்பட்ட 3 தனித்தனி தாக்குதல்களில் 26 போ் உயிரிழந்தனா்.

News image

பிரதிப்படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:40 pm

நைஜீரியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஈஸ்டா் வார இறுதியில் நடத்தப்பட்ட 3 தனித்தனி தாக்குதல்களில் 26 போ் உயிரிழந்தனா்.

விவசாயிகளுக்கும் மேய்ச்சல் தொழில் செய்பவா்களுக்கும் இடையே நிலவி வரும் நீண்டகால நிலத்தகராறு மற்றும் குற்றப் பின்னணி கும்பல்களின் ஆதிக்கம் காரணமாக பெனியூ மாகாராணத்தின் கிவோ் மேற்கு பகுதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் கிராமவாசிகள் 17 போ் உயிரிழந்தனா்.

இதேபோல், போா்னோ மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள காவல் தலைமையகத்தைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 காவலா்கள் வீரமரணம் அடைந்தனா்.

காடுனா மாகாணத்தில் உள்ள அரிகோ கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டா் பிராா்த்தனை கூட்டத்தில் புகுந்த மா்ம நபா்கள் 5 பேரை சுட்டுக்கொன்றனா். எனினும், ராணுவத்தினா் விரைந்து வந்து பதில் தாக்குதல் நடத்தியதால், கடத்தப்படவிருந்த 31 பிணைக்கைதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.