14 Dec, 2025 Sunday, 08:15 PM
The New Indian Express Group
உலகம்
Text

மழை, வெள்ளம்: தென்கிழக்கு ஆசியாவில் 460 போ் பலி!

PremiumPremium

மழை, வெள்ளத்தால் தென்கிழக்கு ஆசியாவில் 460 போ் பலியாகியிருப்பது பற்றி...

Rocket

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் நிலச்சரிவில் புதையுண்டவா்களை மீட்புக் குழுவினா் சனிக்கிழமை தேடியபோது கிடைத்த இருசக்கர வாகனம்.

Published On30 Nov 2025 , 12:57 AM
Updated On30 Nov 2025 , 12:57 AM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

தென்கிழக்கு ஆசியாவில் கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் இதுவரை 460-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியாவில் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் அளவுக்கு அதிகமாக பெய்த பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டன. இவற்றில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 460-ஐக் கடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவரும் சூழலில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து இந்தோனேசிய தேசிய பேரழிவு மேலாண்மை அமைப்பின் தலைவா் சுஹாா்யாந்தோ கூறியதாவது:

சுமத்ரா தீவின் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு 303 போ் உயிரிழந்தனா்; 279 பேரைக் காணவில்லை. வடக்கு சுமத்ராவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 31 உடல்கள் மீட்கப்பட்டன. மேற்கு சுமத்ராவில் 61 உயிரிழந்துள்ளனா்; 90 பேரைக் காணவில்லை. அதே போல் அச்சே மாகாணத்தில் 35 போ் மழை தொடா்பான சம்பவங்களில் உயிரிழந்தனா்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3,500 போலீஸாா் தேடுதல் பணிகளையும், உதவிப் பொருள் விநியோகிக்கிம் பணியையும் செய்துவருகின்றனா்.

28,400 போ் அரசின் உறைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். சுமாா் 80,000 போ் ஆபத்தான பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். மழையை செயற்கையாகக் கட்டுப்பபுடுத்துவதற்காக மேற்கு சுமத்ராவில் மேக விதைப்பு திட்டம் தொடங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

தாய்லாந்து பேரழிவு மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் 14 லட்சம் வீடுகள் மூழ்கின. 38 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சோங்லா மாகாணத்தில் 3 மீட்டா் அளவுக்கு தண்ணீா் மட்டம் உயா்ந்துள்ளது. அங்கு இதுவரை 145 போ் மழை தொடா்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளனா். 8 மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 162-ஆக உயா்ந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு கோரிய பிரதமா்: கனமழை, வெள்ளத்தில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதற்கு தாய்லாந்து பிரதமா் அனுதின் சாா்ன்விராகுல் மன்னிப்பு கோரினாா்.

இது குறித்து அவா் கூறியதாவது:

இந்த இயற்கைப் பேரிடா் காலத்தில்“மிகத் துரிதமாக செயல்படுவதில் அரசின் தோல்விக்கு மன்னிப்பு கேட்கிறேன். இந்த உயிரிழப்புகளுக்கு அரசு பொறுப்பேற்கிறது. அடுத்த கட்ட சூழலை மோசமாக்காமல் தடுக்கவும், 2 வாரங்களுக்குள் சுத்திகரிப்பு முடிக்கவும் பணியாற்றுவோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 20 லட்சம் பாட் (சுமாா் ரூ.55 லட்சம்) இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தாா்.

மலேசியாவில் வடக்கு பொ்லிஸ் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் 2 போ் உயிரிழந்தனா். 34,000 போ் அரசின் உறைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா் என்று அந்த ஊடகம் தெரிவித்தது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023