15 Dec, 2025 Monday, 11:03 PM
The New Indian Express Group
உலகம்
Text

சிரியா மக்கள் மீது இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கிச் சூடு! 10 பேர் பலி!

PremiumPremium

சிரியாவில் இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டது குறித்து...

Rocket

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் (கோப்புப் படம்)

Published On28 Nov 2025 , 10:55 AM
Updated On28 Nov 2025 , 10:55 AM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Ahmed Thaha

சிரியா நாட்டின், தெற்கு பகுதியில் உள்ள கிராமத்தில் அத்துமீறி நுழைந்து சோதனைச் செய்த இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அங்குள்ள மக்கள் மீது சரிமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவின், பெயிட் ஜின் எனும் கிராமத்தில் இன்று (நவ. 28) இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள ஆண்கள் சிலரைக் கைது செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக கிராமவாசிகள் ஒன்று திரண்டதால், அவர்கள் மீது இஸ்ரேல் வீரர்கள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில், 10 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து, இஸ்ரேல் அரசு கூறுகையில், பெயிட் ஜின் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்து இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும்; இதுகுறித்த, ரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளது.

இதையடுத்து, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இஸ்ரேல் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பதில் துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களுக்கு சிரியா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, லெபனான் நாட்டில் போர்நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 127 பேர் கொல்லப்பட்டதாக, ஐ.நா. ஆணையம் தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தாய்லாந்தில் வெள்ளம்! 145 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!

Israeli soldiers have killed 10 people in a raid on a village in southern Syria, after they opened fire on civilians.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023