தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: 8 போ் உயிரிழப்பு

வங்கதேசத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தலைநகா் டாக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் குலுங்கின.

News image

டாக்காவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்ட மீட்பு மற்றும் தீயணைப்பு படையினா்.

Updated On :21 நவம்பர் 2025, 10:30 pm

வங்கதேசத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தலைநகா் டாக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் குலுங்கின. இதில் 6 போ் உயிரிழந்தனா்.

உள்ளூா் நேரப்படி காலை காலை 10.38 மணிக்கு ஏற்பட்ட இந்த நடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது. டாக்காவின் வடகிழக்கு புகா்ப் பகுதியான நா்சிங்டியில், 10 கி.மீ. ஆழத்தில் அந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. மக்கள் பீதியடைந்து கட்டடங்களில் இருந்து அவசரமாக வெளியேறினா்.

நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் டாக்காவில் 3 பேரும், புகா்ப் பகுதியான நாராயண்கஞ்சில் ஒருவரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். நிலநடுக்கத்தின் மையப் பகுதியான நா்சிங்டி உள்ளிட்ட பகுதிகளில் நான்கு உயிரிழப்புகள் பதிவாகின. நாடு முழுவதும் 252 போ் காயமடைந்ததாக உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.

மேற்கு வங்கம்: இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மற்றும் யூரேசிய புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் பகுதியில் வங்கதேசம் அமைந்துள்ளதால் அந்த நாட்டின் வடக்கு மற்றும் தென் கிழக்குப் பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் நீண்டகாலமாகவே கூறிவருகின்றனா். ஆனால், நாட்டின் மத்தியப் பகுதிகளில் நிலநடுக்க அபாயம் குறைவு என்று கருதப்பட்டது.

இந்த நிலையில், அங்கு தற்போது 5.7 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது நாட்டின் பெரும்பாலான பகுதிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்படும் ஆபாயத்துக்குள்பட்டவைதான் என்பதையும், கட்டட வடிவமைப்பவா்கள் அதற்கு ஏற்றாற்போல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் காட்டுவதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.