பறக்கும் கார்கள் உற்பத்தியைத் தொடங்கியது சீன நிறுவனம்
பறக்கும் கார்கள் உற்பத்தியை சோதனை முறையில் தொடங்கியது சீன நிறுவனம்
பறக்கும் கார்கள் உற்பத்தியை சோதனை முறையில் தொடங்கியது சீன நிறுவனம்
By இணையதளச் செய்திப் பிரிவு
Vanisri
அடுத்த தலைமுறைக்கான வாகனமான பறக்கும் கார்கள் உற்பத்தியை சோதனை முறையில் சீன நிறுவனம் தொடங்கியிருக்கிறது.
அமெரிக்க நிறுவனமான டெஸ்லா, விரைவில் பறக்கும் கார்களை உற்பத்தி செய்யவிருப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்னதாக, பறக்கும் கார்கள் உற்பத்தியை சீன நிறுவனம் தொடங்கியிருக்கிறது.
தெற்கு சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் 1.20 ஆயிரம் சதுக மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலையில் முதல் பறக்கும் கார் தயாரிக்கும் பணி தொடங்கியிருப்பதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக ஆண்டுக்கு 5,000 பறக்கும் கார்களை இந்த தொழிற்சாலை தயாரிக்கும் வல்லமை பெற்ற நிலையில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இது ஆண்டுக்கு 10 ஆயிரம் பறக்கும் கார்களைத் தயாரிக்கும் வகையில் மேம்படுத்தப்படவிருக்கிறது.
இதுவரை உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகளிலேயே, மிகப்பெரிய அளவில் திறன் பெற்ற தொழிற்சாலையாக இது அமைந்திருப்பதாகவும், அதன் முழு செயல்திறனும் நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு பறக்கும் கார் உற்பத்தி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது