10 Dec, 2025 Wednesday, 01:33 PM
The New Indian Express Group
உலகம்
Text

போர் நிறுத்தத்திற்குப் பிறகு எப்படி இருக்கிறது காஸா?

PremiumPremium

போர் நிறுத்தத்திற்குப் பிறகு காஸா மக்களின் நிலை பற்றி...

Rocket

காஸாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தக் காத்திருக்கும் பெண்கள்

Published On10 Nov 2025 , 10:52 AM
Updated On10 Nov 2025 , 11:04 AM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Muthumari.M

காஸாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது... தற்போது காஸாவில் மக்களின் நிலை என்ன?

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக். 7ல் தொடங்கிய போர், 2 ஆண்டுகளைக் கடந்த நிலையில், கடந்த மாதம் அக். 10 ஆம் தேதி முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்போது இரு தரப்பிலும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. பிணைக் கைதிகளை விடுவிப்பது இஸ்ரேலின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

ஹமாஸ் தரப்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், குறிப்பாக காஸா மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் உடனடியாக கிடைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்கு இஸ்ரேலும் ஒப்புக்கொண்டது. ஏனெனில் இஸ்ரேலின் தாக்குதலில் காஸா நகரம் முற்றிலும் சிதைந்து போயிருந்தது. அங்கு மக்கள் பசியால் செத்துக்கொண்டிருந்தனர். காஸாவுக்கு வரும் மனிதாபிமான உதவிகளைக்கூட இஸ்ரேல் தடுத்தது.

இந்நிலையில் போர் நிறுத்தம், காஸா நகர மக்களுக்கு ஆறுதல் அளித்தாலும் அவர்களின் வாழ்க்கை நிலை என்னவோ அப்படியேதான் இருக்கிறது.

போர் நிறுத்தத்திற்குப் பிறகும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. போர் நிறுத்தத்திற்குப் பிறகு அங்கு 241 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர், 619 பேர் காயமடைந்துள்ளனர். போர் தொடங்கியதில் இருந்து உயிரிழப்பு 69,000-யைக் கடந்துள்ளது.

ஹமாஸ் உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளையும் இறந்த 24 பேரின் உடல்களையும் இதுவரை ஒப்படைத்துள்ளது.

இஸ்ரேல் தரப்பில் சிறையில் இருந்து 2,000 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று(நவ. 10) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் ஒருவர் கொல்லப்பட்டார்.

மேலும், காஸாவில் ஒரு பகுதியில் இஸ்ரேல் படையினர் கட்டடங்களை இடித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஹமாஸ் குற்றம் சாட்டுகிறது. அதேநேரத்தில் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸின் நடவடிக்கைகளுக்கு பதிலளிப்பதாகக் கூறுகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய 600 லாரிகள் தினமும் காஸாவுக்கு வரும் என்று இஸ்ரேல் உதியளித்த நிலையில் தற்போது 200 லாரிகள்தான் வருவதாகவும் பிற வணிக லாரிகளும் வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

முற்றிலும் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் ஆகியவற்றை இழந்துள்ள காஸா மக்களுக்கு இது போதுமானதாக இல்லை.

காஸாவில் கிழக்கு பகுதியில் இஸ்ரேல் படையினர், ராணுவ வாகனங்கள் மூலமாகவும் மேற்கு பகுதியில் டிரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கான் யூனிஸ் பகுதியின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலும் கடும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

காஸாவின் வடக்கே, பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் இடங்களுக்கு இடம்பெயர்ந்து வரும் நிலையில் கடந்த 75 நாள்களாக அந்த பகுதிக்கு எந்த மனிதாபிமான உதவிகளும் வரவில்லை என்று ஐ.நா. கூறுகிறது.

காஸாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்னும் பசியுடன்தான் படுக்கச் செல்கின்றனர். பொருளாதாரம் இன்றி கையில் பணம் இன்றி அவர்களால் எதுவும் சந்தையில் வாங்க முடிவதில்லை. இறைச்சி, முட்டை ஆகியவற்றுக்கு பற்றாக்குறை உள்ளது, தண்ணீருக்குக்கூட இன்னும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

மருத்துவமனைகளில் இன்னும் போதிய மருந்துகள் இல்லை. சுகாதாரம் இன்றி குழந்தைகள், பெண்கள் பலரும் பல்வேறு நோய்க்கு ஆளாகியுள்ளனர். ஆனால் அங்கு போதிய மருத்துவ வசதிகள் இன்னும் இல்லை.

பெரும்பாலான குழந்தைகள் போரின்போது தடுப்பூசி போடவில்லை என்பதால் அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்க காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் முகாமைத் தொடங்கியுள்ளது.

ஒரு சில பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அதேநேரத்தில் காஸாவில் நீர் ஆதாரங்களும் மிகவும் மாசடைந்துள்ளன. சுற்றுச்சூழலும் மோசமாகக் காணப்படுகிறது. சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை என அங்குள்ள மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான மக்கள் வீடுகளை இழந்த நிலையில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர்.

மாற்றத்தைத் தேடி வாழ்க்கைத் தரத்தைத் தேடி காஸா மக்கள் இன்னும் காத்திருக்கிறார்கள்.

Humanitarian Situation in Gaza After Ceasefire

இதையும் படிக்க | செயல்படாத பழைய வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எடுக்க வேண்டுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
கொள்ளுத் துவையல்
வீடியோக்கள்

கொள்ளுத் துவையல்

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023