அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்க நடத்திய தாக்குதலுக்கு முன்னரே நாங்கள் பாதுகாப்பாக வெளியேறிவிட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே 8 நாள்களுக்கு மேலாக போர் நிலவி வரும் நிலையில், நேற்று(ஜூன் 21) ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியாகவும் போர் விமானங்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று அறிவித்தார்.
”ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளித்தேன். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அணுசக்தி நிலையங்களை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேறி விட்டோம். அணுசக்தி நிலையங்களில் ஏதும் இல்லை, அங்கிருந்ததை பாதுகாப்பாக அகற்றி விட்டோம். இதனால் மிகப்பெரிய சேதத்தை சந்திக்கவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு மையத்தின் தலைவர் கூறுகையில், அணுசக்தி நிலையங்கள் மீது குறிவைத்து நடந்த தாக்குதலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக, அணுசக்தி நிலையங்களில் எவ்வித கதிர்வீச்சு கசிவு, கதிரியக்க மாசுபாடு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
அமெரிக்க தாக்குதல்களுக்குப் பிறகு வளைகுடா பிராந்தியத்தில் "எந்த கதிரியக்க கசிவும் கண்டறியப்படவில்லை" என்று செளதி ஒழுங்குமுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிடிவாதம் தளர வேண்டும்!

சீன உளவு செயற்கைக்கோளை ரகசியமாகப் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


