ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்களை அந்நாட்டு அரசு மதிப்பீடு செய்துள்ளது.
மேலும், அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய ஈரான் செய்தித் தொடர்பாளர் ஃபாதேமெ மொஹஜெரானி,
ஈரானின் ஃபார்டோ, இஸ்ஃபஹான், நாதன்ஸ் ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவந்த அணுசக்தி தளவாடங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அவை கடுமையான சேதமடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்தும் ஈரான் அரசு வெளியிட்ட அறிக்கையின் தரவுகளை குறிப்பிட்டுப் பேசினார். அதில், இஸ்ரேல் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்தவர்கள் 935 பேர் கொல்லப்பட்டனர். இதில் 38 குழந்தைகளும் 102 பெண்களும் அடக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி உற்பத்தியை அழிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் அடிப்படை கட்டமைப்பையே அழிக்கும் நோக்கத்தில் ராணுவ தளபதிகள், அறிவியல் அறிஞர்கள், விஞ்ஞானிகளை குறிவைத்து எதிரி நாடுகள் தாக்குதல் நடத்தியதாகவும், அச்சத்தையும் அழுத்தத்தையும் கொடுப்பதற்காகவே இதனைச் செய்ததாவும் குறிப்பிட்டார்.
ஈரானில் அணுசக்தி உற்பத்தி நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், அதனை அழிக்கும் நோக்கத்தில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 12 நாள்கள் நீடித்து வந்த போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க உயரதிகாரிகள் ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க | ஜெர்மனி யூதர்களை உளவு பார்க்கிறதா ஈரான்? டென்மார்க்கில் ஒருவர் கைது!
Summary
The Iranian government has assessed the damage caused by Israeli and US airstrikes on Iran's nuclear facilities.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிடிவாதம் தளர வேண்டும்!

ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்!

அமெரிக்க படையில் ஒருவர் கூட உயிர் பிழைக்க மாட்டார்! - ஈரானிய தலைமைத் தளபதி எச்சரிக்கை!

போர்நிறுத்தம் கோரவில்லை; அமெரிக்கா தண்டிக்கப்படும் வரை போர் தொடரும்! - டிரம்ப்புக்கு ஈரான் பதிலடி!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


