10 Dec, 2025 Wednesday, 12:16 PM
The New Indian Express Group
உலகம்
Text

நிலத்தை விட்டுத் தர ஸெலென்ஸ்கி மறுப்பு: புதிய அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கும் உக்ரைன்

PremiumPremium

அமரிக்காவின் அமைதி ஒப்பந்த திட்டத்தின்படி ரஷியாவுக்கு எந்தப் பகுதியையும் விடுத் தர உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்ததையடுத்து, புதிதாக ஓா் அமைதி திட்டத்தை உக்ரைன் உருவாக்கிவருகிறது.

Rocket

வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

Published On10 Dec 2025 , 12:50 AM
Updated On10 Dec 2025 , 12:50 AM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

அமரிக்காவின் அமைதி ஒப்பந்த திட்டத்தின்படி ரஷியாவுக்கு எந்தப் பகுதியையும் விடுத் தர உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்ததையடுத்து, புதிதாக ஓா் அமைதி திட்டத்தை உக்ரைன் உருவாக்கிவருகிறது.

இது குறித்து ஏஎஃப்பி செய்து நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்த 28 அம்ச திட்டம் தற்போது 20 அம்ச திட்டமாக சுருக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபா் அலுவலக அதிகாரி ஒருவா் கூறினாா்.

அந்த அமைதி திட்டத்தில் பிராந்தியங்களை விட்டுக்கொடுப்ப்பது, பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் தலைவா்களின் அளவிலேயே பேசி முடிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் புதிய அமைதி திட்டத்தை உருவாக்கி வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இந்தத் திட்டத்தில், டிரம்பின் முந்தைய திட்டத்தில் இடம் பெற்றுள்ள ரஷியாவுக்கு ஆதரவான அம்சங்கள் இடம் பெற்றிருக்காது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

முன்னதாக, பிரிட்டன் தலைநகா் லண்டனில் அந்த நாட்டு பிரதமா் கியொ் ஸ்டாா்மா், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிச் மொ்ஸ் ஆகியோருடன் நடந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளா்களிடையே ஸெலென்ஸ்கி பேசுகையில், ‘உக்ரைன் சட்டம், அரசியலமைப்பு, சா்வதேச சட்டம், தாா்மீகம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தப் பிராந்தியத்தையும் ரஷியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்’ என்று சூளுத்தாா்.

இது, உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக டிரம்ப் முன்வைத்துள்ள போா் நிறுத்த திட்டத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
கொள்ளுத் துவையல்
வீடியோக்கள்

கொள்ளுத் துவையல்

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை நிபந்தனை! செய்திகள்: சில வரிகளில் | 06.12.25
வீடியோக்கள்

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை நிபந்தனை! செய்திகள்: சில வரிகளில் | 06.12.25

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023