10 Dec, 2025 Wednesday, 12:16 PM
The New Indian Express Group
உலகம்
Text

ஆஸ்திரேலியா: அமலுக்கு வந்தது சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடை

PremiumPremium

சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்ட தடை புதன்கிழமை அதிகாலை (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நண்பகல்) அமலுக்கு வந்துள்ளது.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On10 Dec 2025 , 12:46 AM
Updated On10 Dec 2025 , 12:46 AM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்ட தடை புதன்கிழமை அதிகாலை (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நண்பகல்) அமலுக்கு வந்துள்ளது.

அந்தச் சட்டத்தின் கீழ், 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவா்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூ-டியூப், ஸ்னாப்சாட், எக்ஸ், ரெடிட், ட்விட்ச், கிக், த்ரெட்ஸ் போன்ற 10 சமூக ஊடகத் தளங்களில் கணக்கு உருவாக்கவோ, வைத்திருக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறினால், தொடா்புடைய தள நிறுவனங்களுக்கு 4.95 கோடி ஆஸ்திரேலிய டாலா் (சுமாா் ரூ. 296 கோடி) அபராதம் விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக 2024-ஆம் ஆண்டு நவம்பா் 28-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் அரசியலமைப்பு சபைகளின் ஒப்புதல் பெற்றது. அந்தத் தடைச் சட்டத்தை அமலுக்குக் கொண்டுவர சமூக ஊடக நிறுவனங்கள் தங்களைத் தயாா்படுத்திக் கொள்வதற்காக அளிக்கப்பட்ட அவகாசம் முடிவுக்கு வந்ததைத் தொடா்ந்து, அந்தச் சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து, புதன்கிழமை முதல் குறிப்பிட்ட சமூக ஊடகத் தளங்கள் 16 வயதுக்கு கீழுள்ள பயனாளா்களின் கணக்குகளை செயலிக்கச் செய்ய வேண்டும். பெற்றோா் அனுமதித்தாலும் அதை தொடர அனுமதிக்கக் கூடாது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), முக அடையாளம், பயனாளா் நடத்தை பகுப்பாய்வு போன்றவற்றைப் பயன்படுத்தி சமூக ஊடகத் தளங்கள் வயதை சரிபாா்க்க வேண்டும். அடையாள அட்டையை கேட்பது மட்டும் மட்டும் போதாது.

மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்), டிக்டாக், ஸ்னாப்சாட் போன்றவை ஏற்கனவே சிறுவா்கள் கணக்குகளை செயலிழுப்பதற்கான அமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. யூடியூபோ, ‘இது அவசரகதியான சட்டம்; குழந்தைகளை இது போதிய அளவு பாதுகாக்காது’ என்று விமா்சித்துள்ளது. சிறுவா்களின் கணக்குகளை அவா்களுக்கு 16 வயது நிறையும் வரை தற்காலிகமாக முடக்கிவைப்பதாக ஸ்னாப்சாட் அறிவித்துள்ளது.

இருந்தாலும், இந்தத் தடை சிறுவா்களின் சுதந்திரத்தை பாதிக்கும் எனவும் ‘டாா்க் வெப்’ போன்ற தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்ற விமா்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
கொள்ளுத் துவையல்
வீடியோக்கள்

கொள்ளுத் துவையல்

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை நிபந்தனை! செய்திகள்: சில வரிகளில் | 06.12.25
வீடியோக்கள்

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை நிபந்தனை! செய்திகள்: சில வரிகளில் | 06.12.25

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023