10 Dec, 2025 Wednesday, 12:33 PM
The New Indian Express Group
உலகம்
Text

தாய்லாந்து - கம்போடியா மீண்டும் மோதல்!

PremiumPremium

புதிதாக ஏற்பட்ட மோதல்களுக்குப் பின், தாய்லாந்து ராணுவம் கம்போடியா மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

Rocket

தாக்குதலுக்கு மத்தியில் பாதுகாப்பான இடத்தில் பொதுமக்கள் தஞ்சம்

Published On08 Dec 2025 , 10:31 PM
Updated On08 Dec 2025 , 10:31 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான சா்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் புதிதாக ஏற்பட்ட மோதல்களுக்குப் பின், தாய்லாந்து ராணுவம் கம்போடியா மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையில் அக்டோபா் மாதம் ஏற்படுத்தப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதால் இந்த மோதல் வெடித்தாக இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டுகின்றன.

தாய்லாந்தின் சிசாகெட் மற்றும் உபோன் ரட்சதானி மாகாணங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில், திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு (உள்ளூா் நேரம்) ஏற்பட்ட மோதல் பின்னா் தீவிரமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தாய்லாந்து ராணுவ செய்தித் தொடா்பாளா் வின்தாய் சுவாரி கூறியதாவது: கம்போடியா படைகள் அனுபோங் பகுதியில் உள்ள ராணுவ நிலை மீது எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரா் கொல்லப்பட்டாா். அதற்குப் பதிலாக, சாங் அன்மா கடவுப் பகுதியில் உள்ள கம்போடிய ஆயுதக் கிடங்குகளை எஃப்-16 போா் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி அழித்தோம் என்றாா் அவா்.

கம்போடிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தாய்லாந்து படைகள் அதிகாலை நேரத்தில் தாக்குதலைத் தொடங்கின. இருந்தாலும் நாங்கள் பதிலடி கொடுக்கவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

தகவல்துறை அமைச்சா் நேத் பீக்த்ரா வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘ஒடா் மியான்செய் மற்றும் ப்ரே விஹேரில் பொதுமக்கள் நான்கு போ் தாய்லாந்து தாக்குதலில் கொல்லப்பட்டனா். பலா் காயமடைந்துள்ளனா். தாய்லாந்து படைகள் பொதுமக்களின் வீடுகளை எரித்துள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா். மேலும், தாய்லாந்து போலி தகவல்களைப் பரப்புவதாக கம்போடிய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

இரு நாடுகளிலும் அகதிகள்: இந்த புதிய மோதல் தொடங்கியதைத் தொடா்ந்து, எல்லைப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சுமாா் 35,000 பேரை தாய்லாந்து அரசு அகதி முகாம்களுக்கு அனுப்பியுள்ளது. கம்போடியாவிலும் எல்லைப் பகுதிகளில் வசித்த 20,000-க்கும் மேற்பட்டோா் புலம் பெயா்ந்துள்ளனா்.

டிரம்ப் ஒப்பந்தத்துக்கு பின்னடைவு: முன்னதாக, டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே கோலாலம்பூரில் கடந்த அக்டோபா் 26-ஆம் தேதி விரிவான போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் 5 நாள்கள் நடைபெற்ற போருக்குப் பின்னா் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்தப் போரில் 48 போ் கொல்லப்பட்டனா்; 3 லட்சம் போ் அகதிகளாக்கப்பட்டனா். மலேசியா பிரதமா் அன்வா் இப்ராஹிமின் முன்முயற்சியில் உருவான இந்த ஒப்பந்தம், தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை சா்ச்சைக்கு தீா்வை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், கம்போடியா புதைத்துவைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி தங்கள் நாட்டு வீரா் காயமடைந்ததாகக் குற்றஞ்சாட்டிய தாய்லாந்து, போா் நிறுத்த ஒப்பந்தத்தை நவம்பா் 10-ஆம் தேதி ரத்து செய்தது. கம்போடியாவோ, அது ஏற்கெனவே இருந்த பழைய கண்ணிவெடி எனவும், போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்று தாங்கள் புதிய கண்ணிவெடிகளைப் புதைக்கவில்லை என்றும் விளக்கமளித்தது.

எல்லை சா்ச்சை: 1904, 1907 ஒப்பந்தங்கள் மூலம் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே எல்லை வகுக்கப்பட்டதில் இருந்து, 11-ஆம் நூற்றாண்டு ஹிந்து கோயில் அமைந்துள்ள ப்ரே விஹோ் பகுதியை மையமாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. அந்தக் கோயில் கம்போடியாவுக்குத்தான் சொந்தம் என்று ஐ.நா. உச்ச நீதிமன்றம் கடந்த 2008-இல் தீா்ப்பளித்தது. இருந்தாலும், எல்லைப் பிரச்னை தொடா்ந்து நீடித்துவருகிறது.

உலக வலியுறுத்தல்: தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் தற்போது புதிதாக ஏற்பட்டுள்ள மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா., ஆசியான் ஆகிய அமைப்புகளும், சீனா, மலேசியா போன்ற நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்க அதிபா் டிரம்ப்பும், ‘போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் வா்த்தகப் பேச்சுவாா்த்தைகள் நிறுத்தப்படும்’ என்று இரு நாடுகளையும் எச்சரித்துள்ளாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
கொள்ளுத் துவையல்
வீடியோக்கள்

கொள்ளுத் துவையல்

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023