நியூயாா்க்: வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி ஐ.நா. பொது சபை உயா்நிலைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறாா்.
ஐ.நா. பொதுச் சபையின் 79-ஆவது அமா்வின் பொது விவாதக் கூட்டம் நியூயாா்க்கில் உள்ள தலைமையகத்தில் செப்டம்பா் 24 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த உயா்நிலை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசும் சா்வதேச தலைவா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் செப்டம்பா் 26-ஆம் தேதி ‘இந்திய அரசின் தலைவா்’ உரையாற்றுவாா் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவா்களும் பங்கேற்றுப் பேச இருக்கின்றனா். உலகில் அமைதியை நிலைநாட்டுவது, ஐ.நா.வின் பணிகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது ஆகியவை குறித்தும் ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கு முன்பு கடந்த 2021 செப்டம்பரில் பிரதமா் மோடி ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் உரையாற்றினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கிரஸை அவமதிக்கும் உரை: பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

வாக்கு வங்கி அரசியலுக்கு முடிவு கட்ட பொது சிவில் சட்டம்: மேற்கு வங்கத்தில் பிரதமா் மோடி வாக்குறுதி

கன்னியாகுமரிக்கு ஏப்.15 இல் பிரதமா் வருகை

எரிபொருள், மின்சாரம், உர விநியோகம்: பிரதமா் மோடி உயா்நிலை ஆய்வு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

