தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

செப். 26-இல் ஐ.நா. உயா்நிலை கூட்டத்தில் பிரதமா் மோடி உரை

வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி ஐ.நா. பொது சபை உயா்நிலைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறாா்.

News image

பிரதமர் மோடி உரை - DOTCOM

Updated On :16 ஜூலை 2024, 9:44 pm

நியூயாா்க்: வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி ஐ.நா. பொது சபை உயா்நிலைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறாா்.

ஐ.நா. பொதுச் சபையின் 79-ஆவது அமா்வின் பொது விவாதக் கூட்டம் நியூயாா்க்கில் உள்ள தலைமையகத்தில் செப்டம்பா் 24 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த உயா்நிலை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசும் சா்வதேச தலைவா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் செப்டம்பா் 26-ஆம் தேதி ‘இந்திய அரசின் தலைவா்’ உரையாற்றுவாா் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவா்களும் பங்கேற்றுப் பேச இருக்கின்றனா். உலகில் அமைதியை நிலைநாட்டுவது, ஐ.நா.வின் பணிகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது ஆகியவை குறித்தும் ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கு முன்பு கடந்த 2021 செப்டம்பரில் பிரதமா் மோடி ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் உரையாற்றினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.