வங்கதேச பத்திரிகையாளர் ஒருவர் டாக்கா ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வங்கத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்ததில் அவர் நாட்டை விட்டே வெளியேறினார். தற்போது புதிய அரசு பதவியேற்றுள்ளது. எனினும் அங்கு பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.
இந்நிலையில் வங்கதேசத்தில் ஜி-டிவி செய்தி ஆசிரியர் சாரா ரஹனுமா(32) மரணமடைந்துள்ளார். டாக்காவின் ஹதிர்ஜீல் ஏரியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சாராவின் உடலை சாகர் என்பவர் கண்டறிந்து மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார். உடலை பரிசோதித்த மருத்துவர்கள் சாரா இறந்துவிட்டதாகக் கூறினர்.
சாரா நேற்று தன் முகநூல் பக்கத்தில் சில பதிவுகளை இட்டுள்ளார்.
'வாழ்வதைவிட சாவதே மேல்' என்று ஒரு பதிவில் கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், 'உன்னைப் போன்ற ஒரு நண்பர் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. கடவுள் உன்னை எப்போதும் ஆசீர்வதிப்பாராக. உன் கனவுகள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன். நாம் ஒன்றாக நிறைய வேலைகளைத் திட்டமிட்டோம் என்பது எனக்குத் தெரியும். மன்னிக்கவும், அவற்றை நிறைவேற்ற முடியவில்லை. உன் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்' என்று கூறி தன் நண்பருடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவரது முகநூல் பக்க புகைப்படம் 'விடைபெறும் நேரம் வந்துவிட்டது' (Time to say goodbye) என்று உள்ளது.
அவருடைய பதிவுகளும் அங்குள்ள நிலைமையும் வங்கதேசத்தில் சற்று பதற்றத்தை உருவாக்கியுள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வஜீத் இதுகுறித்து, 'டாக்கா நகரில் உள்ள ஹதிர்ஜீல் ஏரியில் இருந்து சாரா ரஹமுனாவின் உடல் மீட்கப்பட்டது. வங்கதேசத்தில் கருத்துச் சுதந்திரத்தின் மீதான மற்றொரு கொடூரமான தாக்குதல் இது.
காஸி டிவி, சமீபத்தில் கைது செய்யப்பட்ட கோலம் தஸ்தகீர் காஸிக்குச் சொந்தமான மதச்சார்பற்ற செய்தி நிறுவனம்' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை நோய்களுக்கு பாராசிட்டமால் கூடாது: பொது சுகாதாரத் துறை
மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்

நீரிழிவு உள்ளதா? கருத்தரிக்கும் முன் செய்ய வேண்டியது என்ன?

வங்கதேச மாணவா் தலைவர் கொலை: இருவா் மேற்கு வங்கத்தில் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

